Sunday, February 14, 2016

. திருவொற்றியூர் - மூலவர் – ஆதிபுரீஸ்வரர் , புற்றிடங்கொண்டார் , படம்பக்கநாதர் ,

தொண்டைநாட்டு தேவார தலங்கள்
20. திருவொற்றியூர்


மூலவர் – ஆதிபுரீஸ்வரர் , புற்றிடங்கொண்டார் , படம்பக்கநாதர் , எழுத்தறியும் பெருமான் , தியாகேசர் , ஆனந்தத்தியாகர் , ஒற்றீஸ்வரர்
அம்பாள் – வடிவுடையம்மை ( திரிபுரசுந்தரி , வடிவுடை மாணிக்கம் )
தலமரம் – மகிழமரம் , அத்திமரம்
தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம் ( காசி தீர்த்தம் ) , நந்தி தீர்த்தம்
புராண பெயர் – திருவொற்றியூர்
ஊர் – திருவொற்றியூர்
மாவட்டம் – திருவள்ளூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர்

• தேவாரப்பாடல் பெற்ற தொண்டைநாட்டு தலங்களில் இத்தலம் 20 வது தலம்
• சுந்தரர் , சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்ட தலம்
• கலியநாயனார் பிறந்த தலம்
• ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம்
• தியாகராஜர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த தலம்
• ஐயடிகள் காடவர்கோன் , முசுகுந்த மன்னன் வழிபட்ட தலம்
• பட்டினத்தார் முக்திபெற்ற தலம்
• வள்ளலாருடன் நெருங்கிய தொடர்புடைய தலம்
• சக்திபீடங்களில் சிறப்பான இக்ஷீ சக்திபீடம்
• நந்திக்கு சிவனார் பத்மதாண்டவக்கோலக் திருக்காட்சி காட்டியருளிய தலம் 




















• மூலவர் ( ஆதிபுரீஸ்வரர் , ஒற்றீஸ்வரர் ) , அம்பாள் ( வடிவுடையம்மன் , வட்டப்பாறையம்மன் ) மற்றும் தலமரம் ( மகிழம் , அத்தி ) , தீர்த்தம் ( பிரம்ம மற்றும் அத்தி ) , ஆகம வழிபாடு ( காரணம் , காமீகம் ) என எல்லாம் இரண்டிரண்டாக அமைந்த தலம்
• கோயிலின் பக்கத்தில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக்குளம் அமைந்துள்ளது
• வெளிப்பிரகாரத்தில் சூரியன் , நால்வர் ( சுந்தரர் சங்கிலி நாச்சியாருடன் ) , சஹஸ்ரலிங்கம் , ஏகாம்பரநாதர் , ராமநாதர் , ஜகந்நாதர் , அமிர்தகண்டீஸ்வரர் , குழந்தை ஈஸ்வரர் , சுப்பிரமணியர் , 27 நட்சத்திர லிங்கங்கள் , ஆகாசலிங்கேஸ்வரர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன.
• நட்சத்திர லிங்கங்களுக்கு மகா சிவராத்திரியன்று விசேஷ அபிஷேக , ஆராதனைகள் சிறப்புடன் நடைபெறுகின்றன
• காளி மற்றும் கௌரீஸ்வரர் சந்நிதிகள்
• கௌரீஸ்வரர் சந்நிதியில் தட்சிணாமூர்த்தி
• ஆதிசங்கரர் வடிவம்
• வேப்பமரத்தினடியில் ஆவுடையார் இல்லாமல் சிவலிங்க பாணம் மட்டும் திருக்காட்சி
• ஆகாசலிங்கம் , அண்ணாமலையார் , ஜம்புகேஸ்வரர் , நாகலிங்கேஸ்வரர் , காளத்தீஸ்வரர் , மீனாட்சிசுந்தரேஸ்வரர் முதலானோரின் சந்நிதிகள்
• ஒற்றியூர் ஈஸ்வரர் சந்நிதி தூண்கள் அழகிய சிற்பவேலைப்பாடு கொண்டவை. இவருக்குதான் நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன
• பைரவர் தனிக்கோயிலில் நாய் வாகனமின்றி திருக்காட்சி
• நடராஜப்பெருமான் சந்நிதி பின்புறம் ஏகபாதமூர்த்தி திருக்காட்சி
• சுந்தரமூர்த்தியார் மண்டபத்தில் சுந்தரர் , சங்கிலி நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் காட்சி. இவர்களுக்கு பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெறுகின்றன
• தியாகராஜர் சந்நிதி மிக விசேஷமானது
• தலவிநாயகராக செல்வவிநாயகர் அருள்பாலிக்கிறார்
• உற்சவ வள்ளி-தெய்வயானையுடனான சுப்பிரமணியர் சந்நிதி
• குணாலய விநாயகர் சந்நிதி
• மூல கருவறை கஜபிருஷ்ட அமைப்புடையது
• படம்பக்கநாதர் சுயம்புவாக நாகப்புற்று வடிவ சிவலிங்க திருவடிவமாக திருக்காட்சி. பாணமும் , ஆவுடையாரும் சதுர வடிவில் திருக்காட்சி. எப்போது கவசம் சார்த்தப்பட்டே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் கவசம் அகற்றப்பட்டு புனுகு , ஜவ்வாது , சாம்பிராணித்தைலம் மட்டும் சார்த்தப்படுகிறது. இந்த நாள் முதல் மூன்று நாட்களுக்கு சுவாமி கவசம் இல்லாமல் பக்தர்களுக்கு திருக்காட்சி தருவார்.
• வாசுகி நாகத்தை சிவனார் தம்முடைய திருவடிவில் சேர்த்துக்கொண்ட தலம் இது
• படம்பக்கநாதர் சந்நிதி பிரகாரத்தில் கலியநாயனார் , 63வர் , தலவிநாயகர் சந்நிதிகள் உள்ளன.
• பீடத்தில் நான்கு சீடர்களுடன் உள்ள ஆதிசங்கரர் சந்நிதி
• ஏகாதசருத்ரலிங்கம் மற்றும் முருகர் சந்நிதிகள்
• வட்டப்பாறையம்மன் சந்நிதி மிகுந்த முக்கித்துவம் வாய்ந்தது
• திருப்தீஸ்வரர் சந்நிதி
• சந்திரசேகரர் சந்நிதி
• கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி , மகாவிஷ்ணு , பிரம்மன் , துர்க்கை முதலானோர் திருக்காட்சி
• துர்க்கையம்மன் காலடியில் மகிஷாசுரன் இல்லை
• நுழைவு வாயில் வலப்புறம் தனிச்சன்னதியில் அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி திருக்காட்சி. இத்தலத்தில் இவ்வம்மையே மிகுந்த வரப்பிரசாதியாக திகழ்கிறார். தினமும் காலை 09:00 மணிக்கும் , மாலை 06:00 மணிக்கும் அம்மைக்கு புஷ்பாஞ்சலி சேவை ( பூக்களால் அலங்கரித்தல் ) நடைபெறுகிறது
• இத்தல வடிவுடையம்மன் ஞானசக்தியாகவும் , இங்கிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள மேலூர் ( மீஞ்சூர் ) திருவுடைநாயகியம்மன் இச்சாசக்தியாகவும் , 25 கிமீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயில் கொடியிடைநாயகியம்மன் கிரியாசக்தியாகவும் திகழ்வதாகவும் , இவர்கள் மூவரையும் பௌர்ணமியன்று ஒரே நாளில் காலையில் திருவொற்றியூர் வடிவுடையம்மனையும் , நண்பகலில் மீஞ்சூர் திருவுடையம்மனையும் , மாலையில் திருமுல்லைவாயில் கொடியிடையம்மனையும் தரிசிப்பது சிறப்பானதாக சொல்லப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் இந்த மூன்று ஆலயங்களும் நாள்முழுவதும் திறந்திருக்கும்.


• நந்தி உயரமான பீடத்தில்

• முக்திபுரம் , ஆதிபுரி , பூங்கோயில் , பூலோகச் சிவலோகம்

என்றெல்லாம் அழைக்கப்படும் தலம்

• மாசிமாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது

• வைகாசியில் தியாகராஜர் வசந்த உத்சவம் 15 நாட்கள் நடைபெறுகின்றது

• கார்த்திகை 3-ம் திங்கட்கிழமைகளில் தியாகராஜருக்கு சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெறுகின்றது

• நடராஜர் அபிஷேகங்கள் , ஐப்பசி அன்னாபிஷேகம் , நவராத்திரி , மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மாசிமகம் , சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம் , கந்தசஷ்டி , மார்கழி திருவாதிரை , தைப்பூசம் முதலான உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

• சுந்தரர் , பரவைநாச்சியார் திருமணம் மாசிமகத்தன்று விசேஷமாக மகிழமரத்தினடியில் நடைபெறுகின்றது. இதற்கு மகிழடி சேவை என்று பெயர் சொல்லப்படுகிறது. 63வரும் இவ்வுற்சவத்தில் பங்குகொள்வது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

• மகிழமரத்தினடியில் சிவனாரின் திருப்பாதம் உள்ளது
• ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று கலிய நாயனார் குருபூஜை விமரிசையாக நடைபெறுகிறது

• ஆடி பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திராட நட்சத்திரத்தன்று பட்டினத்தார் குருபூஜை சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது

• கோயில் அருகேயுள்ள எண்ணூர் நெடுஞ்சாலையில் , சாலை ஓரத்தில் பட்டினத்தார் கோயில் அமைந்துள்ளது.

 பட்டினத்தார் முக்திபெற்ற இடம் இது. கடற்கரையை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிறிய கோயில் இது.
கோயிலின் உள்ளே சிவலிங்க திருவடிவமும் , நந்தியும் உள்ளன. விநாயகர் , சுப்பிரமணியர் , நடராஜர் முதலான உற்சவத்திருமேனிகளும் உள்ளன.

ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் பட்டினத்தார் குருபூஜை நடைபெறுகின்றது.

• திருமண மற்றும் புத்திர தோஷங்கள் நீங்க வழிபடவேண்டிய தலம்
தரிசன நேரம்
காலை 06:00 am – 12:00 pm &
மாலை 04:00 pm – 08:30 pm
தொடர்புக்கு
044-25733703 ,
94444-79057












சென்னையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சென்னையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் விளங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் செல்லும் சாலையில் காலடிப்பேட்டையை அடுத்து வரும் தேரடி நிறுத்தத்தில் இறங்கி , எதிர்ப்புற வீதியின் கோடியில் அமைந்துள்ள கோயிலை அடையலாம்.