Monday, April 13, 2015

"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு"


"உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், 

எனக்குக் குருக்கள்- என்ற பொருளில்,

 நான்  ஜகத்குரு"



"நீங்கள் தான் ஜகத்குரு" 

(மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்)

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி.
பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்
ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.
பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள்சொக்கிப் போனார்.உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம்'இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். 
(பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.)
காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. 
நகரத்தின் முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான
பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை.
'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?...
ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்
கேட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு-
என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை)
ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"
(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்-
என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை
அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின்
மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த
சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்
கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?)
என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)

"சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும்,பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம்
ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை.

அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி,
கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள்
பிரமித்துப் போய்விட்டார்கள். "நீங்கள் தான் ஜகத்குரு"
என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை,
அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து
நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Saturday, April 11, 2015

"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி"

"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி"
(என்னே கருணை!)






சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

எந்த ஊரில் (பொட்டல் கிராமமாக இருந்தாலும்)
இரவு எவ்வளவு நேரமானாலும் கூட ஸ்ரீ பெரியவாளின்
முகாமிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆகாரம்
செய்து வைக்குமாறு சிப்பந்திகளுக்கு ஆக்ஞை
செய்வார்கள். அதோடு நிற்காமல், சற்று நேரத்திற்குப்
பிறகு அந்த சிப்பந்திகளை தனித்தனியே அழைத்து
'வந்தவாளுக்கு என்ன ஆகாரம் பண்ணி வைத்தாய்?
என்று வினவும் பாங்கு பெரியவாளுக்கு உரியது.

வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது.

பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம் பெரியவாள், "எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று கேட்பார்கள்.

"என் பாக்கியம்"

"சிவாஸ்தானம் யானைகட்டித் தெருவிலே உள்ள
வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு,காரம்
பக்ஷணங்களை பண்ணி நீயே போய் கொடுத்துட்டு வா"

பிறகு சில நாட்களில் அந்தப் பாடசாலை குழந்தைகள்
வந்தால் உடனே, "அன்று பக்ஷணம் வந்ததா?
சாப்பிட்டாயா? என்று அக்கறையோடு கேட்பார்கள்.

(மாடுகூடத் திங்காத அழுகல் வாழைப்பழம்
வேதபாடசாலைப் பையன்களுக்கு' என்று பழமொழிபோல்
கூறப்பட்ட காலத்தில் ஸ்ரீபெரியவாளின் பெரிய புரட்சி இது)

ஸ்ரீமடம் எங்கு முகாம் செய்தாலும் பெரியவாளின்
உத்திரவுப்படி, விசேஷமாக, கோடை காலத்தில்
தண்ணீர் பந்தல் போல் பக்த ஜனங்கள் யாவர்க்கும்
நீர்மோர் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.

விசேஷமாக ஓரிருக்கை கிராமத்தில் கடும் கோடையில்
பாலாற்றின் கரையில் பெரியவாள் குடிசையில் அமர்ந்து
கொண்டு, வருபவர்கள் அனைவருக்கும் நீர்மோர்
வழங்கும் குளிர்ச்சியான காட்சி வர்ணிக்க முடியாது








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..."


"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா?
..என்னைப் பார்க்க வந்தாளா?..."





(3 சம்பவங்கள் ஒரே பதிவில்)

சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(ஒரு பகுதி) 

ஊழியர்களோடு பரிவும்
மற்றும் மூன்று. ஸ்வாரஸ்ய சம்பவங்களும்.

("போகி-பல்லக்கு தூக்கி")

நாங்க சாப்பிடுகிற நேரங்களிலே,மகாப் பெரியவங்க
எங்களை சாப்பிட விட்டுட்டுச் சும்மா 
உட்கார்ந்திருப்பாங்க. நாங்க திரும்பி வந்ததும்,
சாப்ப்ட்டாச்சான்னு விசாரிப்பாங்க.

அப்போவெல்லாம் போகிகளுக்கு ஒரு நாளைக்குப்
படி- ஆறு அணா. அது தவிர, குருவை நெல்
அறுவடையில், நூறு கலம்;சம்பா அறுவடையில்,
நூறு கலம் நெல் கொடுப்பாங்க.இந்த ஏற்பாடு
1963 வரை நடைமுறையில் இருந்தது.

ஒரு தடவை (பக்தவத்சலம் முதலமைச்சரா இருந்த
போது) கீழத் தஞ்சை புலவச்சேரிங்கிற இடத்திலேர்ந்து
விடியற்காலை மூணு மணிக்குப் புறப்பட்டோம்.
காளையார் கோவில்லே,காம்ப். தூரம் எழுபத்தஞ்சு
கிலோ மீட்டர்.

அங்கே போனதும், மகாப் பெரியவங்க, எங்க ஆளுங்களுக்கு
குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கும்படி உத்தரவு
போட்டாங்க.பாவம் போகிக்கெல்லாம் தோள் வலிக்கும்'னு
சொன்னாங்க.நாங்க நின்ன இடத்திலேர்ந்து, சுவாமிகள்
காம்ப்,ஒரு கிலோ மீட்டர் இருந்தது.

"நான் நடந்தே போறேன்"-ன்னு சொல்லி,நடந்தே போனாங்க.
அங்கேயிருந்து மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி,
சிவகங்கை போனோம். போனவுடனே,எங்களுக்கெல்லாம்
ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுத்தாங்க.

"இவாளுக்கு ரொம்ப சிரமம்.வடை-பாயசத்தோடு சாப்பாடு
போடு"-ன்னு உத்தரவு போட்டாங்க.(சொல்லும் போதே
கண்ணையனின் கண்கள் உணர்ச்சி மிகுதியால்
கலங்குகின்றன.

ஒரு நாள் காலை சுமாரா ஒன்பது மணி. வேதபுரி சாஸ்திரி,
சுவாமிகளுக்குத் தொண்டு செய்திட்டிருந்தார். அப்போ
சுவாமிகள் ஆசமனம் சங்கல்பம் செய்து ஜபம்
பண்ணிட்டிருந்தாங்க.பட்டணத்திலேர்ந்து சில பேர்
சுவாமிகளைப் பார்க்க வந்தாங்க. 'இப்போ பார்க்க
முடியாது'ன்னுட்டார்,வேதபுரி.

அவங்க போயிட்டாங்க.பெரியவங்க கண்ணை முழிச்சதும் 'பட்டணத்திலேர்ந்துவந்தவா, எங்கே?"ன்னு கேட்டார்.

"அவா போயிட்டா...."ன்னார், வேதபுரி.

"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா?
..என்னைப் பார்க்க வந்தாளா?..."

அப்போ நான் பக்கத்தில் இருந்தேன்.

"அவா பஸ்ஸ்டாண்டிலே நின்னுண்டிருப்பா,
..அழைச்சிண்டு வா"ன்னு பெரியவங்க சொன்னாங்க.

நான் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன்.

அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். 
வேகமா வந்து தரிசனம் பண்ணிட்டுப் பேசினாங்க....

மடத்துக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கணும்னு
வேண்டிக்கிட்டாங்க.

அப்போ,பெரியவங்க, "போகிக்கு ஏதாவது உதவி
செய்யுங்கோ"ன்னு சொன்னாங்க.எங்கமேல
அவ்வளவு பிரியம்.

நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்.
கொள்ளிடக்கரையிலே, மேனாவிலே தபஸ்
பண்ணிட்டிருந்தாங்க பெரியவங்க.இருட்டு வேளை.

மேனேஜர் வந்து மெள்ளக் கதவை நகர்த்தினார்.
சுவாமிகளைக் காணோம்! திடீர்ன்னு ஆயிடிச்சு!
இரண்டு நிமிஷம் கழிச்சு,இருட்டிலேர்ந்து,
'என்ன?'-ன்னு கேட்டுண்டே பெரியவங்க வர்ராங்க!..

"மகாசுவாமிகள் மேனாவிலிருந்து இறங்கிப்
போனதை நீங்களெல்லாம் பார்க்கவில்லையா?"

"கடவுளே! அதுதானே, தெரியலே!..
..கதவு, மூடியபடி தானே இருக்கு.













Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். - கண்ணதாசன்


அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். 
கண்ணதாசன்சொன்னது




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"(கண்ணதாசன்-சொன்னது)
(அர்த்தமுள்ள இந்து மதம் 8-வது புத்தகத்தில்)

அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.




உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை.

லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.




அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார். அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……"








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-

"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்"


"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!(பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.)
சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் குடும்பம் திண்டிவனத்தில் இருந்த போது,

குழந்தை சுவாமிநாதன் அந்த ஊரில் முறுக்கு, சீடை பண்ணி வியாபாரம் பண்ணி வந்த ஒரு பாட்டியிடம், கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் முறுக்கு சீடை வாங்கி உண்டு மகிழ்வான். வெண்ணையை திருடி தின்றாலும், தோழர்களுடன் பகிர்ந்து கொண்ட கண்ணன் போல், சுவாமிநாதனும், தோழர்களும் பாட்டியிடம் நிறைய வாங்கி உண்டார்கள். ஒருநாள் அந்த பன்னண்டு வயது பாலன் சொன்னான்...."பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சு குடுத்திருக்கேனோல்லியோ? அதுனால எனக்கு வெலையக்கொஞ்சம் கொறைச்சு குடேன் " தர்மமான கமிஷனை கேட்டார்.


பாட்டி மறுத்தாள். இன்னுயிரையே இலவசமாக தரவேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால் ! சுவாமிநாதனும் விடாமல் அடமாக இருக்க, பாட்டி அசைந்து கொடுக்கவில்லை.
"போ! இனிமே ஒன்கிட்ட நான் வாங்க போறதே இல்லை" என்றான் கோபமாக.
"வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா, என் பொழைப்பே இல்லாம போயி, ஒன்னை பூர்ணகும்பம் வெச்சு கூப்பிடுவேன்னு நெனைச்சுண்டியோ?" பாட்டி அதைவிட கோவமாக சொன்னாள்.
"முடிவா சொல்லு பாட்டி...நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்!"
என்று மிரட்டிப் பார்த்தார்.அவள் மசியவில்லை.
"நீ கையில் பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து பாரேன்-
நான் இனி ஒரு நாளும் வரமாட்டேன்!" என்று சவால் விட்டுப்
போன சிறுவன்,அதன் பிறகு அவள் வீட்டுப்படி ஏறவேயில்லை!
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்வதால், திண்டிவனமே விழாக்கோலம் பூண்டது. காரணம், ரெண்டு மாசம் வரை அந்த ஊரில் ஓடி விளையாடி செல்லப்பிள்ளையாக இருந்த சுவாமிநாதன்தான், இன்று சங்கராச்சாரியாராக விஜயம் செய்கிறார். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், தங்கள் வீட்டு குழந்தை பால தண்டாயுதபாணியாக ஜொலித்துக்கொண்டு வரப்போவதால், பூர்ணகும்பம் வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
அன்று சுவாமிநாதனிடம் முறுக்கிக்கொண்ட முறுக்கு பாட்டியும் பூர்ணகும்பம் ஸித்தம் பண்ணினாள். உள்ளே பழைய குரல் "போயேன். பூர்ணகும்பம் குடுத்து உன்னை கூப்பிடுவேனோ?" அன்று அந்த சமத்து சக்கரைக்கட்டியை விரட்டி அடித்தோமே! அது அப்புறம் இந்தபக்கம் தலையை காட்டவேயில்லை. இப்போதோ அது எட்டவொண்ணா மஹாகுரு பீடத்தில் ! குழந்தை சுவாமி நம்முடைய பூர்ணகும்பத்தை ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா?

இதோ குழந்தை குருஸ்வாமி தேஜஸ் பொங்கும் ரூபத்தோடு, பாட்டி வீட்டு வாசலில்! அன்று சமத்தாக அளவோடு நின்ற களை, இன்று முகத்தில் தாய்மை பொலிவோடு, தெய்வீகம் பொங்கியோட பாட்டி முன்னால் வந்து நிற்கிறது.


"இதோ நம் வீட்டுக்கருகே வந்து விட்டாரே! இப்போது நான்
என்ன செய்வேன் ?"என்று ஒன்றும் புரியாமல் கதறிக் கண்ணீர்
விடுகிறாள். அவள் வீட்டுக்கு எதிரேயே பல்லக்கு நின்றது.
"அந்த பாட்டி ஏன் உள்ளேயே இருந்து எட்டிப் பார்க்கிறார்?
வெளியே வரச் சொல்லுங்கள்' என்று அன்புக்கட்டளை
பிறக்கிறது.தயாராக இருந்த பூர்ண கும்பத்தைப் பார்த்த பெரியவா
"அவளிடமிருந்து அதை வாங்குங்கள்!" என்கிறார்.
அதைப் பெற்றுக் கொண்டு அவளிடம் "பார்த்தாயா!
கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்ட
வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்"
என்று சிரித்து அவள் பயத்தைப் போக்கினார்.


பக்தர்களிடம் தோற்பதில்தானே பகவான் மகிழ்ச்சி காண்கிறார்.












Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  
Thanks to Mahaperiyava bhaktas for the  photos.

‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”













பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:



”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.



சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.
அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.



ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.


அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.
பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.


லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.
நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.



ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி 
இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.


கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.


மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.
பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.


”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற 

பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.
பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு 

கிடந்ததாம்!


”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.


சாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.


கூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.


‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”

லக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… 

”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்னு











Courtesy :   Facebook post  :   Mannargudi Sitaraman Srinivasan  

Thanks to Mahaperiyava bhaktas for the  photos.