Wednesday, August 5, 2015

Gods and Acharyas



Thiruchendur  Shanmugar - Jayanthinathar 


Maha Vishnu - Sriman Narayana swaroopam  - Viswaroopam

 Gurus of India  of the same period 

Sri Gnanananda swamigal   Sri Seshadri swamigal      Bhagavan Ramana Maharishi  
Sringeri  Sankaracharya  Sri Chandrasekara Bharati  , 
Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal 
Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal 

Sringeri  Sankaracharya  Sri Chandrasekara Bharati  , 



Lord Ayyappa 

  
                                       Karuvoorar Siddhar


                                          Konganar  Siddhar  


                        Maha Avatar Babaji -- Nagaraj siddhar 





                                        Mahaperiyava 

                        Kasi  Siddhar - Trilinga swami 


                 Mahaperiyava  poojai to Sri Akilandeswari amman -                 Thiruvanaikaval  


  
Mahaperiyava  -Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal   doing tapas in a temple pond




               

Tiruvannamalai  -- Bhagavan Ramana Maharishi 





Mahaperiyava  =- Paramacharya  - Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal - Mahaperiyava  =- Paramacharya -  - Jagadguru -- 


 Mahaperiyava  =- Paramacharya - Mahaswamigal - Mahaperiyava  =- Paramacharya -  Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal  -68 th              peetathi pathi of Kanchi sankara mutt . Avatarof Lord Shiva is  Adi Sankara and  Avatar of Adi sankara is  Mahaperiyava  -- Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal Lived for 100 years as sankara and saved our  Hindu vedas , dharma sastras ,upanishads and  all our Bharata desa - Hindu activities 
.






 Mahaperiyava  =- Paramacharya -  - Jagadguru --  Mahaswamigal - Mahaperiyava  =- Paramacharya -  Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal  -68 th              peetathi pathi of Kanchi sankara mutt .

 Mahaperiyava  =- Paramacharya - Mahaswamigal - Mahaperiyava  =- Paramacharya -  Kanchi Sankaracharya  Sri Chandrasekarandra saraswathi swamigal  -68 th              peetathi pathi of Kanchi sankara mutt .
 Maragatha lingam being worshipped in ancient temples of more than 1500 years old in kumbakonam. One of them is at  Thirunallaru - Sri Dharbaraneeswarar temple -- Karaikal also famous for Lord Saneswara bagavan 





                        Loga matha  Sri Moogambikai  -- Kollur 






 Sri Soundareeswarar temple at saidapet in 2010 




Adistanam of  Sri Sada Siva Bramendral  at Nerur near Karur  in tamil nadu.  Peace resides at the samadhi and swamy is a Jeevan mukthar and has got  adistanam ( samadhi ) at  3 places   being  Nerur , Manamadurai , and at Karachi in pakistan. Swami Mahasamadhi occured at the same time in all places.



               Sahasra lingam  at Sri Skandasramam - chennai





Photo of Ekambareswarar at KAnchipuram



Sri thirupura sundari samedha  Sri Chandramoouleswara swamy pooja  Adisankarar and Mahaperiyava 


                                                        Jeevan Mukthas  -


Bhagavan Ramana Maharishi       Sringeri acharya Sri Chandrasekara bharati swamigal   Kanchi Acharyas Sri Chandrasekarandra saraswathi swamigal


Nandi Baba who lives in St.thomas railway station near by sivan koil - nandeeswarar koil  

Palani  - Sri Sakkadai siddhar 


Kanchi Acharya    and  Ramana maharishi


Thiruvannamalai   Kattu siva swamigal


Siddhar in a cave


Siva and Shakthi swaroopam  - Ramana Maharishi   &  Mahaperiyava


Sri Durai venkatesa swamii






                                                           Siddhar 


Kala bhairava  yantram

Ramaswamy siddhar  - samadhi near palani 



 Sri Sadguru Siddharameshwar  Maharaj 


 Mahaperiyava  =- Paramacharya -  - Kanchi Sankaracharya   Jagadguru  Sri Chandrasekarandra saraswathi swamigal  -   68 th  peetathi pathi of Kanchi sankara mutt .

 Mahaperiyava  =- Paramacharya -  - Kanchi Sankaracharya   Jagadguru  Sri Chandrasekarandra saraswathi swamigal  -   68 th  peetathi pathi of Kanchi sankara mutt .
   


































Sri Kanchi Kamakshi Amman 
Sri Adi Sankara Bagavathpada

 Mahaperiyava  =- Paramacharya -  - Kanchi Sankaracharya   Jagadguru  Sri Chandrasekarandra saraswathi swamigal  -   68 th  peetathipathi of Kanchi sankara mutt .

  Jagadguru  Sri Jayendra  saraswathi swamigal  -   69 th  peetathipathi of Kanchi sankara mutt .

  Jagadguru  Sri  Sankara Vijayendra saraswathi swamigal  -   70th  peetathipathi of Kanchi sankara mutt .
Kanchi kamakoti peetam




Wednesday, June 17, 2015

ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"


ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014
ஸ்பெஷல் போஸ்ட்=1

(கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி}







சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர்.
கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.

சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"
                          


'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!




தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்…' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"பக்தர்களின் மனக்குறையை தீர்த்த சங்கரன் !"





"பக்தர்களின் மனக்குறையை தீர்த்த சங்கரன் !"

மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்

பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது 

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே "

பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.

"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் ...".






ஒரு மூங்கில் தட்டை காண்பித்து "நீ கொண்டு வந்ததை எடுத்துவை" என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கநிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?

அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .





ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.

அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவாகிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.

இந்த நெல்லிக்கனி விஷயத்தில் மகான் இன்னொரு அற்புதத்தையும் சேலத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார். இங்கே பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .




இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.

அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள் ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்

பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது

ஹால் நிறையக் கூட்டம்

அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார் 





அவரது கையில் ஒரு பை 

நான் "ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்" என்றார் வந்தவர் 

"அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது" இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார் 

"சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்" என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்

"யார் தந்ததாகச் சொல்வது?"

"சங்கரன்" என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார் 

அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. 

இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது 

பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?


இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.