Monday, April 20, 2015

மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு.


         மஹா பெரியவா என்கிற வார்த்தையே  
                  பிராண வாயு.  






மஹா பெரியவா என்கிற வார்த்தையே  பிராண வாயு.  மூச்சுக்காற்று.  சகல  துக்க நிவாரணி.  சர்வ ரோக நிவாரணி.  சர்வ பாபநாசினி.  இன்னும்  என்ன சொல்ல?   கோடானு கோடி   சம்பவங்களில்  ஒன்று அடி மனதை  தொட்டு விட்டது.  அதை உங்களுக்கும் பரிமாறி   அந்த  வார்த்தைக்கப்பால் பட்ட   சுகானுபவம்  நீங்களும்  பெற  எனக்கு ஆசை.  எங்கிருந்தோ எனக்கு  வந்ததை  சற்று   செப்பனிட்டு அளிக்கிறேன். 
  டாக்டர் சிவசங்கர் அமெரிக்காவே  தஞ்சம்  பிறந்த தமிழகமோ   தாய் நாடு  இந்தியாவோ ஒரு உபயோகமற்ற, உருப்ப டாத  சாக்கடை,  இந்தியர்கள் திருத்த  முடியாத காட்டுமிராண்டிகள்  தன்னைத்தவிர என்ற  அமெரிக்க- தா(க் )க- இந்தியர். இந்தியாவுக்கு  மனத்தில் விருப்பமில்லாமல்  மனைவியின் தொண  தொணப்பு தாங்காமல்  வந்து கொண்டிருக்கிறார். 



போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக்  கொண்டிருக்ககட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள்போல முளைத்தனநுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு

நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

கடல் மட்டும்தான் மாறலை !”பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்துசின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக்குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள்விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

மே  ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியதுஅதற்கப்புறம் புரியவில்லை.

உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

உண்மையைத்தானே சொல்றேன்இந்த நாடு உருப்படுமா சொல்லுஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாதுஉட்கார ஒரு நாற்காலிகிடையாதுஅமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான்ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டுஎதுக்காக இந்த நாட்டுக்குஏரோப்ளேன் ?”பாகீரதி பேசாமல் இருந்தாள்இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”பேசவில்லை.

அலுமினிய சொம்போட ?”பேசவில்லை.விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

என்ன மோசமான லாண்டிங் !”விமானம் ஊர்ந்தது.

உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோஎதுக்காக என்னை இழுக்கறே !”

நீங்களும் பார்க்கணும்.”

எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதேநான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி,

இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்கமூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

ரெண்டு டாலர்ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

கென்னடில வந்து இறங்கறேன்டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாதுஅப்ப அங்க ஒரு….”அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.சீட்டிலேயே உட்கார்ந்திருந்துஎல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போதுஉஷ்ணம் அவர்களைத் தாக்கிஐம்பதுஅடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசிக்குக் கொண்டு வந்துவிட்டது.

எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.
             




இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்துபாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும்மத்த எதுவும் வேண்டாம்இந்தியாவுக்குசாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.பாகீ மௌனமாகவே வந்தாள்அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம்நடைமுறைதான் கஷ்டம்’ என்று.இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லைகாஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார்அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களாபாரு இந்தியாவிலே …”கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியைஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து,எடுத்து வைத்துக் கொள்ளசிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மிஎக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்கஅந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க— இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

வாட் வாட் ?”அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்ததுகைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

எல்லாம் உன்னால தான்எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறேநான்தான் இந்தியா வர மாட்டேன்பிரின்ஸ்டன்லயே இருக்கேன்;எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையாஎதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒருபொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

டேய் ...... யார்ரா பொறுக்கிஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”

நீங்க வாங்கஅவனோட என்ன ?”பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள்.இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.வராந்தாவுக்கு வந்தார்கள்வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள்யார் என்று தெரியவில்லைஅவரவர் அவரவர் கார்களில்ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்லசற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்கஎங்க மைலாப்பூர் தானே !”

நான் எங்கே போனா உனக்கென்ன ?”

அவனோட பேச வேண்டாம்.”

சும்மனாங்காட்டியும் கேட்டேன்கோவிச்சுக்கிறியேம்மா !”அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

டாக்டர் சிவசங்கர்.”

காஞ்சி பார்ட்டி நீங்கதானே ?ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

ஆமாம்.”

இருங்க வண்டி வந்திருக்குது.”

நான் சிவராமன் இல்லைப்பா.”

சரி சிவசங்கர்வாங்கஉங்களுக்குத்தான் வண்டி.”பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்ததுபெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்துமூடிஓடிப் போய் சீட்டில்அமர்ந்தான்.

ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலைஎன்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்கடெலெக்ஸ்ல….”

எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

டிரைவர் உங்க பேரு என்ன ?”

பால்ராஜு...ங்கம்மாஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது.

பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

எதுவும் வேண்டாம்ப்பாஆளை விடு!”


பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ்மெதுவாப் போங்கஅவசரமே இல்லை.”

நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பாஎனக்கு அவசரம் இல்லைநான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லைஇந்த அம்மாதான்இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

அப்படீங்களா ? சந்தோசங்கமனித தெய்வம் சார் பெரியவருஇதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்கஇன்னம்பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” 
என்றார் சிவசங்கர்.

எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம்அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லாதெய்வங்களும் ஒண்ணு தானே ….”

விபூதி வரவழைப்பாரா ?”

அது சாய்பாபாங்கஅவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

உனக்கு நடந்ததா ?”

பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்கஅடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

பெரியவர்தாங்க தெய்வம்தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குதுஉங்களுக்கு என்ன வேணுங்க !”

காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

அம்மா உங்களுக்கு ?”

நிம்மதி “ என்றாள்.

அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

பால்ராஜ்பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லைநான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

எனக்குத் தேவைப்படுதுங்க.”

லுக் அவுட் !” என்று கத்தினார்.வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்துதார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்கபால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்கபதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னிபோட்டுரலாங்கஇளநி சாப்பிடுங்க.”சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார்மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

இளநி சீவலாங்களா ?”

வேண்டாம்ப்பா .”

சீவிட்டேங்களே…”பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

சரிகுடு” என்றார்நல்ல வேளை.இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

வேண்டாம்மாபெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

மயிரிழைல தப்பினம்.”

எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டதுஏரியில் வாத்துகள் நீந்தஅதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள்காவல் நின்றனகோபுரங்கள் வெண்மையாகபுதுசாகத் தெரிந்தனநகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது.குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும்சுதந்திர மாடுகளும்ஓடும் நாய்களும்லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்…. பாகீரதிக்குஉற்சாகம் பொங்கியது.பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம்ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்கஅப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

இல்லைங்கஅரைமணிதான் அவரைப் பார்க்க சமயம்அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

நாளைக்குப் பார்த்துக்கலாம்முதல்ல ஓட்டல்எனக்குப் பசிக்கிறது.”ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.

காமாந்தகார கன்னி’ என்ற சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்ததுஅதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

பாத்ரூமில் கரப்பான் பூச்சிசுவர்களில் ரத்தக் கரைடவல் அழுக்குமருந்து நாற்றம்அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன்நாம வந்ததுபரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ணஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

நாம வந்ததுன்னு சொல்லாதேநீ வந்ததுஎனக்கு இதில இஷ்டமில்லைநம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப்பரவாயில்லைதலைவலி எனக்கு !”அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மாஅம்பாள் பூசை செய்யறாரு சின்னவருவாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

நான் வரலை நீ போநான் ரூம்ல இருக்கேன்.”

நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

அதான் பால் இருக்கானே ?”

அய்யா நான் உள்ளே வர மாட்டேங்கவெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

ச்சேஉன்னோட வேதனை பாகீ !”

ப்ளீஸ்ஒரு நாளைக்குஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதாபிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப்பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

நான்தான் காரணமா சொல்லு ?”

சரி நானும்தான் காரணம்.”பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன்ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாதுஅப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன்நான் நாஸ்திகன்மதமும்ஒரு போதைப் பொருள்ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

சும்மா வாங்களேன் துணைக்கு!”அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!”என்றார்.பாகீரதிக்கு அழுகை வந்ததுஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

ஹூ இஸ் திஸ் பாய் ?”

புதுப் பெரியவா.”

வாட் நான்சென்ஸ்இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

நீங்க விழ வேண்டாம்.”

இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்




அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவிபெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.சிவசங்கரன் ஓரமாக நிற்க ........

நிக்கறேளே உட்காருங்கோபேரு ? “

ஷிவ்ஷங்கர்.”

ஊரு ?”

அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” 
ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

எனக்குத் தெரியாதுப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றதுஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

இல்லை சுவாமிபௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டதுபிரபஞ்சத்தையே ஒரு துகள்ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

இல்லை நாங்க சொல்றது வேற .”

அது இங்கிலீஷ்இது சம்ஸ்கிருதம்பவானீத்வம்இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன்நான்என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயேகரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

இல்லை.”

பால்ப்ரண்டன்ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

இல்லை.”

பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்பஉங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்துவந்திருந்தார்பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்ஷாவைப் போட்டுண்டு வந்தார்ஆசீர்வாதம் வாங்கிண்டார்.அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவாஅவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டுஆப்பிளைக்கொடுத்து அனுப்பிச்சார்.அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார்காணோம்பதறிப் போய்ட்டார்.பர்ஸ் மட்டும் இல்லைபாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும்அப்படியே ஒடிஞ்சுபோய்ட்டார்எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லைசைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்லை.கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டில சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்திலஅந்த இடத்தில் ரெண்டாயிரம்பேராவது புழங்கியிருப்பாஇதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன்மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்கமுடியும் ?”

நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம்நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன்தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்கநீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்கமஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்ததுமெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்துகொண்டாள்மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள்.உள்ளே இலேசான இருட்டாக இருந்ததுமெல்ல அணுகினார்கள்.உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார்காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம்வைத்திருந்தார்கள்முழங்கால் மடங்கியிருந்ததுயாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்கஅவ்வப்போது மாலையை அணிவித்துக்கழட்டிக் கொண்டிருந்தான்இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு

அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்கபுடவை மேல் பட்டுத் தெறித்தது.

பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோஇந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம்மேம்போக்கா இவர் குதர்க்கம்பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.ஒரே பிள்ளைபாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான்பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும்சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !உலகம் பூரா தேடியாச்சுநேபாள்சிலோன்ஜப்பான்எல்லாம் தேடியாச்சுஆக்சிடெண்டில போய்ட்டானாசெத்துப் போய்ட்டானாஇருக்கானா…. ?எம்புள்ளை போய்ட்டான்நிம்மதியே இல்லைஇன்னி வரைக்கும் !”

பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்கசார் நீங்களும்தான் சார்.”அந்த இளைஞன்அருகில் சென்று அவர் காதுடன் சொல்லஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார்பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன்,

எல்லாம் சரியாய்ப் போய்டும்.கவலைப்படாதீங்கோ.பையன் பேர் என்ன சொன்னேள் ?”

பாலாஜி.”அவர்கள் வெளியே வந்தனர்.சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”

சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !
அவள் அடங்காமல் அழுதாள்.

பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லிடோன்ட் மேக்  ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றிபரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்திஅழைத்துச் சென்றார்.  பின்னால் குரல் கேட்டது.  மடத்து  சிப்பந்தி  ஒருவர் ஓடி வருகிறார். ''   மாமி  மாமி,   பெரியவா  உங்க கிட்ட  யாரையோ   அனுப்பியிருக்கா "'
யார்? 
  ஒரு  கட்டுக்குடுமிக்காரர்  ஒருவர்  ஒரு   இளம்  வாலிபனுடன் வந்தவர்  ''  டேய்   பாலாஜி நேத்திக்கி  பெரியவா  சொன்னாளே  இன்னிக்கி  வருவான்னு     ''இவா தானே  அது  - 
''எங்க  அப்பா அம்மா  தான் வந்திருக்கா !”   
இதற்கு  மேல்   எழுதுவது அர்த்தமில்லை.    இதயமும்  மனமும்   தானே எழுதிக்கொள்ளும்.











  


  Courtesy :   mail from  Meera Neelakantan
      Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


Namaskaram 

Narayanan Ramaswamy

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!








மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

by BaalHanuman

பெரியவாளின் மகிமையையும் ஞானத்தையும் விளக்கும்படியாக இன்னொரு சம்பவம்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச்சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண-காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள்கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியொரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தமகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!






Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Namaskaram

Narayanan.R