Wednesday, September 21, 2016

ஸ்ரீ சக்கரவர்த்திரேகை பார்த்திருக்கியா? என்றார். நான் பார்த்திருக்கேன்..

ஸ்வாமினாத இந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }



ஸ்ரீ பெரியவாளுக்கு அடிக்கடி மார் வலி வரும். அதற்காக நான் ஐயப்ப ஸ்வாமியிடம் வேண்டிக்கொண்டேன். ஐயப்பன் என்ற ஸ்வாமியை பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. ஆனால் மயிலை கபாலி கோவிலில் நிறைய பக்தர்கள் கறுப்பு வேஷ்டி கட்டிக் கொண்டு ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஐயப்ப தரிசனத்தால் உடல் உபாதை நீங்கும் என்ற படியால் சபரி மலை செல்ல நினைத்து பெரியவாளிடம் அனுமதி பெற்று புறப்பட்டேன். முதலில் பெரியவா சத்தம் போட்டார் உனக்கு என்ன தெரியும்?அப்பா,தாத்தா யராவது போயிருக்காளா என்று கோபமாக கேட்டார். இல்லை உங்களுக்கு உடம்பு தேவலையாவதற்காக என்றதும் சரி என அனுமதி அளித்தார். தன் கழுத்தில் இருந்த மாலை ஒன்றை கழற்றிக் கொடுத்தார். ஒரு துண்டு ஒன்றையும் கொடுத்தா பெரியவா. நீ ப்ரம்மச்சாரி இந்த வெள்ளை வேஷ்டியோடேயே போகலாம் என்றும் அருளினார். மலையில் சத்தம் போடுவார்கள். மலை ஏறியதும் இந்த சிகப்புத் துண்டை கட்டிக் கொள் என்று ஒரு துண்டையும் கொடுத்தா. வெறுங்கையுடன் போகக் கூடாது தேங்காயும் நெய்யும் எடுத்துக்கொண்டு போ என அருளினார். நாகராஜ ஐயர் காரில் நான் ஏறும் சமயம் ஏய் பாலு என்ன சாப்பிட எடுத்துண்டாய்? என ஒரு தாய் அன்புடன் கேட்டார். பெரியவா என்ன சொல்றேளோ எடுத்துக்கறேன் என்றேன்.








நூறு எலுமிச்சம் பழம் பையில் போட்டு எடுத்துண்டு அதையே அப்பபோ சாப்பிடு. ஸ்வாமி தரிசனம் முடியும் வரை இது தான் உன் ஆகாரம். முதலில் இரண்டு நாள் பல் கூசும் அப்பறம் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்பினார்.
நானும் அவர் சொன்ன மாதிரியே செய்து அங்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தேன். அங்கு மேல்சாந்தி என்ற தலைமை பூசாரிக்கு எல்லாரும் ஐந்து, பத்து தக்ஷிணை போட்டு நமஸ்கரித்தார்கள். நான் மட்டும் நூறு ரூபாய் போட்டதால் என்னை அவர் ஸ்வாமி எந்த ஊர் என்று கேட்டார். நான் காஞ்சீபுரம் என்றதும் பெரிய திருமேனி எப்படி இருக்கார். எனக் கேட்டார். கேட்டது பெரியவாளை பத்தி..நான் சௌக்யமாக இருப்பதாகக் கூறவும் அவரால் தான் நாம் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமல் சுபிட்க்ஷமாக இருக்கோம் என்றார். 

பெரியவாளுக்கு ப்ரசாதம் கேட்டேன். அவர்பெரிய பாட்டிலில் இருந்த இரண்டு கிலோ நெய்யை அபிஷேகம் செய்து கூடவே விபூதியையும் வைத்து பெரியவாளுக்குக் கொடுத்தார். என் நமஸ்காரத்தை அவருக்கு சொல் என்றார். நீ அந்த பெரியவா திரு மேனியை விடாதே அவர் ஈச்வர அவதாரம் அவர் சன்னிதியிலே இரு நகராதே அவருடன் இருப்பதாக சத்யம் செய்து கொடு என்று என்னிடம் சத்யம் வாங்கிக் கொண்டார்.






திரும்பி வருகையில் எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீல் வீட்டில் தங்கி சாப்பிட்டு விட்டு நாங்கள் அவருடைய அம்மா வீட்டுக்குப் சென்றோம். பெரியவாளிடமிருந்து வந்திருப்பதால் என்னைப் பார்க்க விரும்பியதால் அங்கும் சென்றேன். அந்த அம்மா என்னிடம் பெரியவா பற்றி நிறைய பேசி ஏய் நீ ராம ஐய்யர் மாமாவைப் பார்க்காமல் போகக் கூடாது என்று சொன்னதால் அங்கும் சென்றேன். அவருக்கு தொண்ணூறு வயசிருக்கும். அங்கு போனதும் யாரு பாலுவா? யார் அவன்? என்று கேட்டார். நான் பெரியவா கிட்டேருந்து வந்திருக்கேன் என்று சொன்னதும் ஆஹா! பெரியவாகிட்டேர்ந்தா? என்று துள்ளி என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். நான் எனக்குப் போய் நமஸ்காரம் செய்கிறீர்களே என பதைப்புடன் கேட்டவுடன் டேய் இது உனக்கு இல்லை...அந்த பகவானுக்குச் செய்தேன் என்றார். பெரியவா நம்மை போல் சாப்பிட்டுத் தூங்கிர ஒரு மனுஷன்னு நினைக்காதே. அவர் சாக்ஷாத் பரமேச்வரன்...டா என்றார். அவர் கையில் சங்கு,சக்கரம், பாதத்தில் சக்கரம், சிரஸில் சந்திரன் எல்லாம் இருக்கு... பாத்தியா? 
ஸ்ரீ சக்கரவர்த்திரேகை பார்த்திருக்கியா? என்றார். இல்லை பார்த்ததில்லை நீ தஞ்சாவூர் காரனாச்சே...பார்த்ததில்லையா? நான் பார்த்திருக்கேன்... இது வரை யாரிடமும் சொல்லாத விஷயம் சொல்றேன்...கேட்டுக்கோ...பெரியவா இங்கு நாற்பது நாள்கள் தங்கியிருந்தார். தினசரி விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து அனுஷ்டான ஜபம் முடித்து ஸ்னானம் செய்து பூஜை செய்து...பிக்ஷை முடிந்து சாயரக்ஷை கோவில் சென்று உபன்யாஸம் நிகழ்த்தி இரவு 12 மணிக்குத்தான்படுக்கப் போவார்.
 இப்படி 40 நாட்கள். எனக்கு தாள் வில்லை. ஒரு நாள் கைகூப்பி அவர் முன் நின்றேன். நான் ஒன்று சொல்லணும் ஆனால் சொல்ல தயக்கமாக இருக்கு என்றேன். நான் சிங்கம் புலி இல்லை சொல் தைரியமாக என்றார். பெரியவா தினம் மூணு மணிக்கு எழுந்து படுக்க இரவு பன்னெண்டு மணி ஆகிவிடுகிறது. உங்களுக்கு ஒரு நாள் மங்கள ஸ்னானம் செய்து வைக்க ஆசை எனக்கு... நீங்கள் குருவாயூரப்பன் அவதாரம்... உங்களுக்கு அபிஷேகம் பண்ண எனக்கு ஆசை என்றேன். ஒஹோ உனக்கு அப்படி ஒரு ஆசையா... சரி
சனிக்கிழமை எண்ணை கொண்டு வா என்றார். 
அதன் படி சென்றேன். மிளகு துளசி போட்டுக் காய்ச்சிய எண்ணையை தலையில் வைத்த போது தான் தெரிந்தது சிரஸில் சக்கர ரேகை. கையில் காலில் சக்கரவர்த்தி ரேகை... பார்த்து விட்டு அப்படியே நமஸ்காரம் செய்தேன். 




அவர் ஈச்வரன்தான் என்பதில் சந்தேகம் இல்லை... நீ அவருடனேயே இரு... இதை எல்லாம் நான் ஊர் திரும்பியதும் பெரியவாளிடம் சொன்னேன். உடனே பெரியவா தண்டத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டுஎழுந்து நின்ற கோலம் சாக்ஷாத் பரமேச்வரன் சூலம் தாங்கி நின்றது போல் இருந்தது! இன்னும் என்ன சொன்னார்? என்றார் பெரியவா?





பெரியவா நடக்க வேண்டாம் காலில் இருக்கும் ரேகைகள் அழிந்து விடும் என்றும் சொன்னார். உங்களுக்கு எண்ணை தேய்த்து விடுபவர்களுக்கு நீங்கள் ரேகைகள், சக்கரங்களைக் காண்பிக்கிறீர்கள் எங்களுக்கும் அருளக்கூடாதா? (சதா தாங்களே கதி என்றிருக்கும் எங்களுக்கு )என்று நான் கேட்டதும் எனக்கும் அந்த பாக்யம் கிட்டியது! தலையை நன்றாகப் பார்த்துக்கொள் மூன்று சுழி சிரஸின் மேல் ! சரி நீங்கள் இனி நடக்கக் கூடாது என்றதும் சின்னக் குழந்தை போல் சரி என்று கலவையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். நடக்க வேண்டாம் என்றால் 30 கிலோ மீட்டர் நடந்து வருகிறீர்களே? என் குரு நாதர் பிறந்த நாள் அதனால் வந்தேன்... இனி நீ சொல்லும் வரை இங்கேயே இருப்பேன் என்று அதன் படி மூன்று வருஷம் அங்கேயே தங்கினார்.







ஸ்வாமினாத இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {பாலு அண்ணா }
சொன்னது தாயுமானவன் மூன்றாம் பகுதியில்...

Wednesday, September 14, 2016

உழவரப்பணி - அப்பர் அருட்பணி மன்றம் - சைதாப்பேட்டை - ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோவில











சிவனுக்கும்  அணைத்து இறைவர்களுக்கும்  பிடித்தமான  அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ! 
அப்பர் அருட்பணி மன்றம்  கடந்த 4 வருடங்களாக  உழவரப்பணியும் , திருவாசக  முற்றோதல் நிகழ்ச்சியும்  சிறப்பாக  சென்னை சைதாப்பேட்டையில்  ஸ்ரீ சௌந்தரேஸ்வரர்  திருக்கோவிலிலும் மற்றும் சென்னையில்  சில கோயில்களில்  நடத்தி வருகிறோம்.  தற்சமயம் ப்ரதிமதமும்  அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதற்கு Rs.3,500 /- ( 50 -60  அடியார்களுக்கு ) செலவு  ஆகிறது . அதற்க்கு தங்களால்  ஆனா  உதவியை  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும்  சென்னையிலும் அருகாமையிலும்  தங்களுக்கு தெரிந்து  உழவரப்பணி செய்ய வேண்டிய கோயில்களுக்கும்  எங்கள்   உழவரப்பணி செய்யும்  அடியார்களுடன் வந்து கோவிலை சுத்தம் செய்து  தருகின்றோம். மேலும் பாழடைந்த கோவில்களுக்கு சென்று  சுத்தம் செய்தும் தருகிறோம். 

தங்களால் ஆனா உதவியை  பணமாகவோ  /      பொருளாகவோ எங்களுக்கு  உதவி  செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். 

என்றும் இறைபணியில்  நாம்  - 

தொடர்புக்கு  -- +91  9176081976 / 9840187387































சிவனுக்கும்  அணைத்து இறைவர்களுக்கும்  பிடித்தமான  அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ! 
அப்பர் அருட்பணி மன்றம்  கடந்த 4 வருடங்களாக  உழவரப்பணியும் , திருவாசக  முற்றோதல் நிகழ்ச்சியும்  சிறப்பாக  சென்னை சைதாப்பேட்டையில்  ஸ்ரீ சௌந்தரேஸ்வரர்  திருக்கோவிலிலும் மற்றும் சென்னையில்  சில கோயில்களில்  நடத்தி வருகிறோம்.  தற்சமயம் ப்ரதிமதமும்  அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதற்கு Rs.3,500 /- ( 50 -60  அடியார்களுக்கு ) செலவு  ஆகிறது . அதற்க்கு தங்களால்  ஆனா  உதவியை  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும்  சென்னையிலும் அருகாமையிலும்  தங்களுக்கு தெரிந்து  உழவரப்பணி செய்ய வேண்டிய கோயில்களுக்கும்  எங்கள்   உழவரப்பணி செய்யும்  அடியார்களுடன் வந்து கோவிலை சுத்தம் செய்து  தருகின்றோம். மேலும் பாழடைந்த கோவில்களுக்கு சென்று  சுத்தம் செய்தும் தருகிறோம். 

தங்களால் ஆனா உதவியை  பணமாகவோ  /      பொருளாகவோ எங்களுக்கு  உதவி  செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். 

என்றும் இறைபணியில்  நாம்  - 

தொடர்புக்கு  -- +91  9176081976 / 9840187387



Friday, August 12, 2016

காஞ்சி 65 தாவது பீடாதிபதி ஸ்ரீ சுதர்ஷன மகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் , 66வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்



Sri Sudarsana Mahadevendra Saraswati










 Kanchi Kamakoti Peetathipathi - 66 th acharya  -
 Sri Chandrasekarandra saraswathi swamigal - V11










Courtesy : Thanks to http://sankaramathas.blogspot.in/2015   for this Original post.

Friday, July 15, 2016



"Kamaraj is coming to see Me, remove the thorns!"
======================================
Whenever I met Kamaraj he used to ask me without fail, "How is Periyava?"
You should have His darshan at least once", I used to tell him.
"Yes, I too feel the same way... But, I am not getting the correct opportunity...", Kamaraj told me.
Once I invited Kamaraj to have His darshan when he came to Kanchipuram for election related work.
"Not today. It is not correct to have His darshan when I had actually come for election work! It will be respectful only if I exclusively came to meet Him alone!"
A few months before he passed away, Kamaraj had darshan of Periyava at Kalavai (which is approximately 44 kms from Kanchi). On hearing that he is coming, Periyava told His kainkaryam people, "He is not keeping good health! Please do not make him walk for long distances. Let him come by car to the maximum extent possible. And on the path where he will walk, please clear it off the stones and thorns so that he can walk comfortably!
Shankara, what compassion. This shows what a man Kamaraj was!
They had kept a stool for Kamaraj to be seated. When Periyava motioned him to sit, he refused to sit!
Shankara.
No words were exchanged between him and Him for a long time. When it was time for him to leave, Kamaraj told Periyava:
"People should live comfortably without any difficulties. Periyava should give His Blessings!"
Periyava lifted His hands and blessed!
Also, Kamaraj did not keep the Prasadam that Periyava had given him, on the car seat or in his pocket or did he give it to others to carry. He kept that Treasure in his own hands!
*****
Where are such Gems these days!
July 15th, today is the 113th birthday of Shri Kamaraj. He was born in the year 1903! He was a prominent National Leader and former Chief Minister of Tamil Nadu. A Diamond of a person who will sparkle for eternity until the Sun and the Moon exist!
A blessed Day to Everyone.
Shankara.

Thursday, June 30, 2016

குரு ராகவேந்திர ஸ்வாமிகள் = ஞானானந்த ஸ்வாமிகள் Sri Raghavendra swamigal, Sri Gnananda Swamigal




  


 குரு ராகவேந்திர ஸ்வாமிகள்          ஞானானந்த ஸ்வாமிகள்

(Sri Raghavendra Swamy - Rayar)                   ( Sri Gnananda Swamigal)


       குரு ராகவேந்திர ஸ்வாமிகள்          ஞானானந்த ஸ்வாமிகள்

Mantralayam  - Sri Raghavendra Swamy - Rayar       Thirukovilur  Sri Gnananda Swamigal - 
                                                                                         Thapovanam

 இன்று  காலையில் தியானத்தில்  வந்த செய்தி.  குரு ராகவேந்திரரை தியானம் செய்கையில் அவர் தான் திருக்கோவிலூர்  தபோவனத்தில் உள்ள  ஞானானந்த ஸ்வாமிகளாக அவதரித்தார் என்ற செய்தி கிடைத்தது . எவரேனும்  இந்த செய்தி பற்றி  முன்பே அறிந்திருந்தால் பகிரவும் .  

சுப மஸ்து 

Mantralayam  - Sri Raghavendra Swamy - Rayar       Thirukovilur  Sri Gnananda Swamigal - 
                                                                                         Thapovanam



 குரு ராகவேந்திர ஸ்வாமிகள்          ஞானானந்த ஸ்வாமிகள்






                                                 ஞானானந்த ஸ்வாமிகள்


                                                               குரு ராகவேந்திர ஸ்வாமிகள்   




 குரு ராகவேந்திர ஸ்வாமிகள்   

ஞானானந்த ஸ்வாமிகள்    குரு ராகவேந்திர ஸ்வாமிகள் 

Mantralayam  - Sri Raghavendra Swamy - Rayar       Thirukovilur  Sri Gnananda Swamigal - 

                                                                                         Thapovanam

Wednesday, June 22, 2016

கண்ணன் கணவனாக வருகிறான்.! பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,”






நீ திருப்பாவை படித்தாய்கண்ணன் கணவனாக வருகிறான்திருவெம்பாவை படித்தாய்பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,”
காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர்மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர்அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.
அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம்


என்ன விஷயம்?” என்று பெரியவர் கேட்டார்.
பெரியவாஇவள் எங்களுக்கு ஒரே மகள்இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறதுதாங்கள் அனுக்கிரகம் செய்துதிருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,” என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்ன?” என்றார்.

ராதா’ என்றாள் அவள்.
பெரியவர் அவளிடம்

உங்கள் ஊரில் பெருமாள் கோவில்சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?” என்றார்.

ஆம்’ என்றாள் அவள்.

சரி

அடுத்த மாதம் மார்கழிதினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடுபெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடுசிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடுஉனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையாஅந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,” என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள்தை மாதம் பிறந்ததுஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டதுராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர்.

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர்அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.
எங்கள் பூர்வீகம் பாலக்காடுஉங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம்அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,” என்றனர்.
திருமணப் பேச்சு நடந்ததுநிச்சயதார்த்த நாள்முகூர்த்த நாள் குறிக்கப்பட்டதுதை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.
திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும்அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர்பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.
ராதாவிடம்

உன் பெயர் ராதா தானேஉனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?” 
என்று கேட்டார்.

கண்ணன்” என்ற ராதாவிடம்
உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?” என்றார்.

ஆம்என்றாள் ராதா ஆச்சரியமாய்.

மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?’ என்று அவள் 
ஆச்சரியப்பட்ட வேளையில்

நீ திருப்பாவை படித்தாய்கண்ணன் கணவனாக வருகிறான்திருவெம்பாவை படித்தாய்பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,” என்றார்.
இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள்முக்காலமும்
 உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன!