Tuesday, January 27, 2015

Mahaperiyava mahimaigal

எமதர்மனுக்கே டாட்டா!

தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடராஜனின் மகளின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. இந்நிலையில்
மாப்பிள்ளையின் சித்தப்பாவிற்கு ஹார்ட் அட்டாக். .சி.யூவில் இருந்தார். இப்போதும் ஏதும் சொல்ல
முடியாது என்றார்கள் டாக்டர்கள்.

பெண்ணைப் பெற்றவர்களுக்கு மனக் கலக்கம்.எவரும் அபசகுனம் என்று ஏதும் கூறாமல் இருக்க வேண்டும். திருமணம் தடையில்லாமல் நடைபெற வேண்டுமே என்ற எண்ணமே பிரார்த்தனைபகவானைத் தஞ்சமடைவதைத் தவிர,இந்நிலையில் வேறு உபாயம் இல்லை என்று உணர்ந்தனர் அத்தம்பதி.

காஞ்சிபுரம் மஹாப் பெரியவாளை தண்டனிட்டு வணங்கினார்கள். தங்களின் மனக்கலக்கத்தை
தெய்வத்திடம் தெரிவித்தனர்

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
"
பெண்ணின் திருமணம் குறித்து கவலைப்பட வேண்டாம் குறித்த முகூர்த்தத்தில் அமோகமாக நடைந்தேறும்"
இது ஸ்வாமிகளின் அருள்வாக்கு. எவராலும் கொடுக்க முடியாத தைரியத்தைத் தந்தது இத்தெய்வத்தின் வாக்கு.

எமதர்மனுக்கே டாட்டா காண்பித்து விட்டு எழுந்து வந்து விட்டார் சித்தப்பா. மணமக்களை ஆசிர்வதித்து
அட்சதைப் போட்டார்.

"
தெய்வத்தின் வாக்கு பொய்க்குமோ?

courtesy : website





No comments: