Friday, February 13, 2015

"நீங்கள் எல்லாருமே திருடாள்!" "சிரிக்க வைத்தும் -- மஹா பெரியவா






"நீங்கள் எல்லாருமே திருடாள்!"
"சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்"


ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012)சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக
வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள்
பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்.

கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

குருநாதன் முகத்தில் குறும்பு நகை.விளையாட்டுப்பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே
இருந்தவரிடம் கேட்கிறார்; "இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?"

"ஸ்ரீகண்டன்"


"இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார் 
அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்."

ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின்
பெரியவாள் சொல்கிறார். "திருக்கண்டன்-னு சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்."

அடியாருக்குப் புரிந்து விடுகிறது.பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். 'ஸ்ரீ' என்று 
வருமிடத்திலெல்லாம் 'திரு' என்று மாற்றவேண்டும்;

ஸ்ரீரங்கம்,ஸ்ரீபெரும்பூதூர் போன்ற பெயர்களைத் திருவரங்கம்,திருப்பெரும்பூதூர் என்றே இனி
வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அன்று காலைதான் செய்தி
வெளியாகியிருந்தது. அதனால் 'ஸ்ரீகண்டன்என்று மட்டும் சொல்லலாமா? பெரியவாள்,

பெரியவாள், "இந்த இடத்திலே ஸ்ரீகண்டனை திருக்கண்டன்-னு சொல்றது தப்பு; தெரியுமோ?"
என்று கேட்கிறார். அது எப்படித் தப்பு என்பதையும் விளக்குகிறார்.

"ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று மாத்திரம் நினைத்துக் 
கொண்டு,'ஸ்ரீ'யைத் 'திரு' ஆக்கு என்கிறார்கள்.
ஆனால் 'ஸ்ரீ' என்பதற்கு வேறே பல அர்த்தங்களும் உண்டு. பாம்பு,பாம்பின் விஷம் இதற்கெல்லாங்கூட
'ஸ்ரீ' என்று பெயர்.'மங்கள காரியங்களுக்கு உதவாத 
செவ்வாய்க் கிழமைக்கு 'மங்களவாரம்' என்று பெயர்
வைத்த மாதிரி பாம்பை 'ஸ்ரீ' என்று சொல்வதுண்டு

"'ஸ்ரீகண்டன்' என்றால் லக்ஷ்மியைக் கண்டத்தில் 
(கழுத்தில்) வைத்துக் கொண்டிருக்கிற மஹா விஷ்ணு
என்று அர்த்தமில்லை. மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷ்ஸ்தலத்தில் (மார்பில்)தான் வைத்துக்
கொண்டிருக்கிறாரே தவிரக் கண்டத்திலே அல்லஸ்ரீகண்டன் என்றால் ஸரியான அர்த்தம், ஸ்ரீ என்கிற
பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற அல்லது ஆலஹால விஷத்தைக் கழுத்தில்
வைத்துக்கொண்டிருக்கிற நீலகண்டனான பரமசிவன் என்பதே.

இப்படி அறிவுச்சுடர் தெறித்த பெரியவாளின் முகத்தில் மறுபடியும் நகைச் சுவையின் பச்சொளி
மேவியது.

"திருக்கண்டனோ இல்லையோ, அவன் திருடன்
என்றார். மேலும் பரபரப்பூட்டும் விதத்தில்,
"நீங்கள் எல்லாருமே திருடாள்!" என்றார்.


"புரியவில்லையா? சீமான்,சீனிவாஸன்-னு எல்லாம் 
சொல்கிறது எதை? ஸ்ரீமான்,ஸ்ரீனிவாஸன் என்பதைத்
தானே? 'ஸ்ரீ' தமிழில் 'சீ" ஆகுமென்றால் "சீ"யை யெல்லாமும் இனிமேல் 'திரு' என்றுதானே
சொல்லணும்?

என்னை 'ஜகத்குரு' என்று டைட்டில் கொடுத்து வைத்திருக்கிறீர்களோல்லியோ? அதனால்
நீங்களெல்லாம் என் சீடர்கள்;

சீ-டர்கள்;அதாவது திரு-டர்கள்."

விழுந்து விழுந்து சிரிக்கிறார்.அவர் மட்டுமா?  அத்தனை பேருமே!

ஆனால் சிரிப்பிலேயே இதுபோன்ற மொழி பெயர்ப்புகளைக் குறித்து அவர்கள் சிந்தனையைச்
சிறக்கவும் வைத்து விடுகிறார்





















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


 



“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” - இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன்


   “ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” - இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன்


“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”

ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்

.
நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

. “ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க்கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலொசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது!




Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. -- மஹாபெரியவா - Mahaperiyava


 "இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை --மஹாபெரியவா - Mahaperiyava

ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின்
மகத்தான மனிதநேய உபதேசம்"
(படித்தால் புல்லரிக்கும்)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர்.
அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில்
கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா....

"ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக்
கேட்கிறார்.

"ரிடையர் ஆன பிறகு நான் மிகவும்
..கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்.

"ஏண்டா?" பெரியவா கேட்கிறார்.

"யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை...
கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில்
கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு
கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்.

"உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம்
போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட
என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று
முடித்தார் அம்முதியவர்.

பெரியவா அமைதியாகச் சொன்னார்....

"இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை.
நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா?
காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு
ஜெபம் செய்...அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு
பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள்.
வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்....
பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை
பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ....
அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்......
அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே....
எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்....
இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்" 

வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள
குறையும் தெரிந்தது... அடுத்தபடியாக தான் எப்படி
நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர்
புரிந்து கொண்டார்.

" நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்...
பகவானை நினைத்துக் கொண்டே இரு...
இது வேண்டும்...அது வேண்டும் என்று ஆசைப்படாதே..
நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக்
கவனிப்பார்கள்" என்றார்.

வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது..

ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும்
அனுபவிக்கவும் முடியாது.....
அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது...
காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள
வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை.

பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன்
அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு
அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக.
பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை
மகனுடன் அனுப்பி வைத்தார்.

மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார்
என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா.














courtesy :  Facebook  :  Varagooran Narayanan
Thanks for Mahaperiyava bhaktas for the scanned photos.


கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை நீ அறிவாயோ" -- மகா ஸ்வாமிகள்.




"கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை
நீ அறிவாயோ"

தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சிவன் கோவிலின் அர்ச்சகர் தங்கள் கிராமத்துக்
கோவிலில் வருமானம் இல்லாததால் நகரத்துக்குச்
சென்றார். பேற்றோர்களின் அறிவுரை அவரிடம்
செல்லுபடியாகவில்லை.

நகரத்துக் கோவிலில் நல்ல வருமானம். தன்
வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர் வசதிக்கு ஏற்ப
வாழ்ந்து வந்தார். கூடவே தலைக் கனமும் ஏறியது.

பலன்-நகரத்துக் கோவிலின் பணி பறிபோனது.

மனக்குறையுடன் பெரியவாளை தரிசனம் செய்ய
சென்றிருந்தார். தன் குறைகளை கொட்டினார்.

"கிராமத்தில் வருமானம் இல்லாததால் தான் இங்கு
வந்தேன்.இங்கு வேலை போய்விட்டது" என்று
கண் கலங்கியவராகக் கூறினார்.

"கிராமத்தில் உள்ள கோவிலின் மஹிமையை
நீ அறிவாயோ" என்றார்கள் ஸ்வாமிகள்.

அதற்கு பதிலே இல்லை அர்ச்சகரிடம்.

"உன் ஊர் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். கோவில்
ஆகம விதிப்படி கட்டப்பட்டது. அப்படிப்பட்ட கோவிலில்
பூஜை செய்வது உன் புண்ணியம். நீ வெளியில் சென்று
கஷ்டப்படுவது பகவானுக்கு விருப்பமில்லை போலும்.
நீ கிராமத்திற்கு சென்று அப்பாவுடனே பூஜையை செய்"
என்றார்கள் பெரியவா.

பெரியவாளின் உத்தரவாயிற்றே.அதன்படியே தன்
கிராமத்து கோயிலின் பூஜையை கவனித்துக்
கொள்ள சென்று விட்டார்.

ஒரு மாதம் கடந்த நிலையில் அக்கோவிலின்
திருப்பணி வேலைகள் ஆரம்பித்து விட்டன.
ஒரு வருடத்தில் கும்பாபிஷேகமும் முடிடைந்தன.
பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

மேலும் ஒரு வருடம் கடந்தது. பெரியவாளை
தரிசனம் செய்யச் சென்றார் அந்த அர்ச்சகர்.

"இப்போ எந்தக் கோவிலில் பூஜை?" என்றார்கள்

கதறியபடியே காலில் விழுந்து வணங்கினார்
அர்ச்சகர்.நடந்தவற்றை அப்படியே தெரிவித்தார்.

"ஜீவிதத்திற்கு கஷ்டமில்லை தானே" என்றார்கள்
பெரியவா.

"எல்லாம் ஸ்வாமிகளின் ஆசியினால் தான்"
என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.

"நான் என்ன பண்ணிப்பிட்டேன் பெரிதாக
எல்லாம் சிவனின் அருள்" என்றார்கள் ஸ்வாமிகள்.

தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் எப்போதும்
பெரியவாளுக்கு விருப்பம் கிடையாது.

குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம் -- காஞ்சி மகாபெரியவா !!


குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்

ஜனவரி 20,2015,- தினமலர்

காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.

ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.

அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.

அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார்.

இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது.

தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.

அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார். அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.

பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.

அந்தப் பெண் பெரியவரிடம்,""சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.

பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

""இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், ""ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு!

அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.

இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார்.

"உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார்

. ""உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.

ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது.

இதுதான் மகாபெரியவரின் கருணா கடாட்சம்!+




Courtesy  :  Facebook   :   Varagooran Narayanan

Thanks for  Mahaperiyava bhaktas for the photos.

ஸ்ரீ காளிகாம்பாள் ,ஸ்ரீகமடேஸ்வரர் -- Sri Kaligambal udanaya Sri Kamadeswarar



ஸ்ரீ காளிகாம்பாள் ,ஸ்ரீகமடேஸ்வரர்
இத்திருக்கோவில் சென்னையில் பாரீஸ் தம்பு செட்டிதெருவில் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் காளிகாம்பாள், சிவனின் பெயர் கமடேஸ்வரர். முதன் முதலில் இத்திருத்தலம் சென்னைக்குப்பம் என்னும் பகுதியில், பண்டைக் கால ஆங்கிலேயர் ஆட்சியில் கிபி 1640 யில் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்டது.  பிறகு ஆங்கிலேயர்களின் கோரிக்கையின் பேரில் தம்பு செட்டி தெருவிற்கு
இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இத்திலுகோவில் விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இத்திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு ஈசான்யமாகவும், திருமயிலைக்கு வடக்கிலும், திருவொற்றியூருக்கு தெர்க்கிலும், மற்றும் திருவேற்க்காட்டிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தினை வியாசர், அகத்தியர், பராசரர், பிருங்கி மகரிஷி போன்ற பல முனிவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மற்றும் இந்திரன், வருணன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் முதலானோரும் இத்திருதலத்தை
வழிபட்டுள்ளார்கள். மற்றும் குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு. 
இன்னும் சத்ரபதி சிவாஜி அவர்களும் காளிகாம்பாளை வழிபட்ட பிறகே தனக்கு முடிசூட்டிக் கொண்டார் என்ற வரலாறு செய்திகளும் உண்டு.
இவ்வாலயத்தின் ஸ்தல விருக்ஷம் மாமரம்.  அம்மனின் பிகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன் வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி, ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா, நடராகஜர், இன்னும் நிறைய சந்நிதிகள் உள்ளன.
  
இவ்வாலயத்திலும், ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை காணலாம். இங்கு அருள் பாலிக்கும் காளிகாம்பாள் மற்ற சக்தியை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.  இன்னும் சொல்லப் போனால் காஞ்சி காமாட்சியே, காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அம்பாள் அமர்ந்திருக்கும் காட்சியானது கைகளில் அங்குசம், பாசமும், நீலோத்ப மலரை தாங்கிய
வண்ணமுமாகவும், பின் இடக்கையில் வரத முத்திரை தரித்த நிலையிலும், தன் ஒரு காலை மடித்தும் வலது காலை தாமரையின் மேல் வைத்து பத்மாசன நிலையில் காட்சி தருகிறாள். இத்திருக்காட்சியைப் பார்க்க கண் கோடி வேண்டும். ஆக நீங்களும் வந்து அம்மனை தரிசித்து அருள் பெருங்களேன்.




 






Courtesy  :  

NARAYANAN SUBRAMANIAM  from groups.

Thanks for Amman photos in the net. Thanks amman bhakthas