Thursday, May 14, 2015

"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"





"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்"
(லோக கருணை)




சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்
குறைகளையும் கஷ்டங்களையும் திருப்பித் திருப்பி
சொல்லிவிட்டு, 'பெரியவாள் அனுக்ரஹம் பண்ண
வேண்டும்' என்று வேண்டும் காட்சி ஸர்வஸாதாரணம்.
பெரியவாளை தரிசித்து விட்டு ஒன்றும் வேண்டாமல்
செல்பவர்கள் மிக மிக அரிது. 

இந்நிலையில் தினசரி விடியற்காலம் விசுவரூப
தர்சனத்திலிருந்து தொடங்கி, தொடர்ந்து பல மணி
நேரம் பக்தர் கூட்டம் அலைமோதித் தம் கஷ்ட 
நஷ்டங்களை பல முறை (வலம் வந்து வந்து)
கூறினாலும் கூட நிகரற்ற பொறுமையுடன்
அதைக் கேட்டு தன் திவ்ய கரத்தை உயர்த்தி அபயம்
கூறும் அருளை யார்தான் விளக்க முடியும்?

ஒரு பாட்டி காஞ்சி மடத்தில் ஒரு சமயம் தன் குடும்ப
சச்சரவு பற்றி திரும்பத் திரும்பக் கூறினார்.
அந்த செய்திகளைப் பெரியவாளின் செவியில்
விழும்படி கூறும் ஒரு சிப்பந்தி, சற்றுக் கடிந்து 
கொண்டு உரத்த குரலில் 'பாட்டி உங்களுக்கு வேறு 
வேலையில்லை?எத்தனை தடவை திருப்பி திருப்பி
கூறுவது? என்றார்.

ஸ்ரீபெரியவாள்,"ஏண்டா! யாரது? ஏன் கத்தரே?"

"யாரோ பாட்டி, சொன்னதையே திருப்பித் திருப்பி 
கூறுகிறாள்."

"என்ன சொல்றா, என் காதில் விழவில்லையே
மறுபடி ஒரு முறை நீ கேட்டுச் சொல்லு" என்றதும்
பாட்டிக்கு எத்தனை ஆனந்தம்!

சில நேரத்தில் கஷ்ட பரிஹாரங்கள் கூறுவார்கள்.
பக்தர்களின் நிதிநிலையைக் கேட்டு, அதற்கு
ஏற்றபடி கோவில்,குளம்,தானதர்மம் செய்யுமாறு
உத்திரவாகும். அதில் ஒரு நிகழ்ச்சி.

வணிகத்துறை பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் வந்து
மஹாஸ்வாமிகளைத் தரிசித்துக் கூறினார்.

எனக்கு பல நாட்களாக பிஸினஸ் மந்தம்.
பல கவலைகள். ராத்திரி படுத்தா தூக்கம் வரவில்லை
மன உளச்சலை தாங்க முடியவில்லை. பெரியவாள்
அருள் தேவை.

ஸ்ரீபெரியவாள், "நீ ஒரு கார்யம் பண்ணுவாயோ?"

"காத்துக் கொண்டிருக்கேன்"

"பௌர்ணமி அன்று இரவு உன்னால் முடிந்த மட்டில்
ஆகாசத்தில் பூர்ண சந்திரனைப் பார்த்துண்டே,
ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை சந்திரமண்டலத்தில்
இருப்பதாக தியானம் பண்ணு.ஸகல கவலையும் விலகும்."








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



"தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;


















"தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;
தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு."

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்




தவம் செய்வது என்றால் என்ன?

பத்மாஸனத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்கள்
மூடிக்கொண்டிருப்பது மட்டும் தானா?

ஒரு வாரத்துக்கு மேல், சேர்ந்தாற்போல்,பிட்சையே
செய்யவில்லை, பெரியவாள்.அதனால் உடற்தளர்ச்சி
ஏற்பட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை.
பூஜை செய்வது,தரிசனம் கொடுப்பது. ஸ்ரீமடம்
அதிகாரிகளுக்கு உத்திரவு-எல்லாம் குறைவில்லாமல்
நடந்துகொண்டிருந்தன.

ஆனால், ஸ்ரீமடம் பணியாளர்கள் மனம் தவித்துப்
போய்விட்டார்கள். பெரியவாள் ஒரு டம்ளர் பால்
கூட அருந்தாமல் இருக்கும் போது,இவர்களால்
மட்டும் மனமொப்பி உணவு ஏற்க முடியுமா?

ஒரு கோஷ்டியாகச் சென்று பெரியவாளிடம்
மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டார்கள்.

'யார் என்ன தவறு செய்தார்?' என்பது தெரிந்தால்,
அந்தத் தவறு மீண்டும் நிகழாதபடி கவனமாக
இருக்கலாமே?..

நாள்தோறும் ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வரருக்குப்
பலவகையான நைவேத்தியங்கள் செய்யப்படும்.




சித்ரான்னங்கள்,பாயசம்,வடை-இப்படி எத்தனையோ!

நைவேத்தியம் செய்யும் போது அவைகளின் பெயர்களைக்
கூற வேண்டும்- நாரிகேலோதனம்,திந்த்ரிண்யன்னம்-
தத்யன்னம்,குள பாயஸம்,மாஷாபூபம்.

ஒரு நாளைக்கு, இவைகளைக் கண்ணால் பார்த்து,
மனத்தால் சொல்லிக்கொண்டிருக்கும் போது.....'

- பெரியவாள் தொண்டையின் பந்து ஏறி இறங்கியது.

"என் நாக்கு ஊறியது..தவிச்சுப்போயிட்டேன்-
நாக்கை வளரவிட்டு விட்டோமே-ன்னு,




நாக்கை அடக்குவதற்காகத்தான் இந்தப் பிராயச்சித்தம்.
இப்போ, நாக்கு அடங்கிப் போச்சு!..."

சிப்பந்திகள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.
நாளையிலேர்ந்து பிட்சை செய்யலாம்.'

தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல;
தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு.

















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Tuesday, May 12, 2015

அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!"


அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா!"

(காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்)






 














அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!"

(காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்)

(இது ஒரு மறுபதிவு)

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் பகிர்ந்துகொள்கிறார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.






ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!






இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.

காஞ்சிப் பெரியவரும்,ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணைநடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!




















Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Ramana MAharishi  &  Mahaperiyava bhaktas for the scanned photos.



காஞ்சிப் பெரியவரைப் பற்றி இந்துத் துறவி ராம கோபாலன் அவர்கள்.



 காஞ்சிப் பெரியவரைப் பற்றி 

 இந்துத் துறவி 
ராம கோபாலன் அவர்கள்.












காஞ்சிப் பெரியவரைப் பற்றி எனக்கு நன்றாகவே
தெரியும். அவராக விரும்பினால் மட்டுமே பேசுவார்.
எனக்கு வியப்புத் தருகிற அம்சம் என்னவென்றால்
நான் காஞ்சி மடத்துக்குச் சென்ற ஒவ்வொரு முறையும்
மௌனம் காக்காமல் என்னிடம் ஆத்மார்த்தமாகப்
பேசியிருக்கிறார். அந்த பாக்யம் என் பேறு!!
அவரை சந்திக்க எத்தனையோ அரசியல்வாதிகள்
வந்திருந்தபோதிலும் ஒரு முறை கூட அவர் எந்தக்
கட்சியுடனும் அரசியலுடனும் அவர் சம்பந்தப் படுத்திக்
கொண்டதில்லை. ஆனால் உலகளவில் ஆதிக்க அரசியல்
எப்படி இருந்தது என்பது பற்றித் தெரிந்தும் அவர் அரசியலில்
இருந்து வெகு தூரத்தில் விலகியிருந்தார்.
நான் தலியில் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில்
ஆஸ்பத்ரியில் இருந்தபோது எனக்குப் ப்ரசாதம்
அனுப்பியிருந்தார். அதனை என் வாழ் நாள் முழுதும்
மறக்க இயலாது.

ஆஸ்பத்ரியில் டிஸ்சார்ஜ் ஆகி காஞ்சி மடத்துக்குப்
போனபோது பாலப் பெரியவாளுக்கு யாக சாலையில்
வைத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னை
உட்காரச் சொன்னார். பாடம் முடிந்தவுடன் என் உடல்
நிலை பற்றி விஜாரித்தார்.என்னைச் சுற்றி மூன்று
சக்கரங்கள் போட்டார்.எனக்கு அதன் அர்த்தம்
விளங்கவில்லை. ஜயேந்த்ர பெரியவாளும், பாலப்
பெரியவாளும் என்னிடம் ''இதுபோல் யாரிடமும்
அக்கறை எடுத்துக் கொண்டதில்லை'' என்றார்கள்.
ஏதோ உயர்ந்த நோக்கத்தில்தான் அவ்வாறு
சக்ரம் போட்டிருப்பார்கள் எனத் தோன்றியது.
பற்றற்ற நிலைக்கு அவர் ஓர் உதாரணம்.அவர்
சித்தியாவதற்கு முன் காஞ்சி சென்றிருந்தேன் .
ஜயேந்த்ர பெரியவாளிடம் கங்கைக் கரையில்
ஸஹஸ்ர காயத்ரி செய்யும் ஒருவரைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்''நீதான்
ஒரு கோடி காயத்ரி ஜபத்தை முடிச்சிருக்கியே''
என்றார். நான் ''இல்லை, கொஞ்சம் குறைச்சலாகத்தான்
செய்திருப்பேன்''என பதில் சொன்னேன். ''எந்த வருஷம்
முதல் செய்யிகிறாய்'' என்று என்னைத் திரும்பக் கேட்டார்.
''1935லிருந்து ''என்று பதில் சொன்னேன்.அதான் முடிச்சிட்டயே''
என்று சொன்னார் ஜயேந்த்ரர்.


பிறகு பெரியவாளை அவர் சித்தியாவதற்கு முன்
பார்க்கச் சென்றேன்.ஒரே கூட்டம். தடுப்புக்காக
மர பென்ச் ஒன்றைப் போட்டிருந்தார்கள்.அதைத்
தாண்டி வரச் சொன்னார் பெரியவர். அருகில் போனேன்.
தொண்டர் ஒருவர் ''இவருக்கு உடம்பு சரியில்லை,
அதனால் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கார்'' என்று
சொன்னார். என்னை நிமிர்ந்து பார்த்தார் பெரியவர்
''நான் என் உடம்பைப் பற்றிக் கவலைப் படவில்லை,
அங்கங்கே மத மாற்றங்கள் நடக்கிறது, இது
பூதாகாரமாகாமல் தடுக்க அனுகரஹம் பண்ண வேண்டும்''
என சொன்னேன். சிறிது நேரம் கண்ணை மூடியிருந்தார்
ஆமாம் என்பது போல். பிறகு ஆசிர்வதித்து அனுப்பினார்,
அதுதான் கடைசி சந்திப்பு.
ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன்,
அவருடைய மறைவு என் மனடில் எவ்வித வெற்றிடத்தையும்
ஏற்படுத்தவில்லை.மாறாக அவர் இப்போதும் என்னுடன்
இருப்பதாகவே உணர்கிறேன்.
இதனைப் பகிர்ந்தவர் இந்துத் துறவி எனக் கருதப்படும்
ராம கோபாலன் அவர்கள். ஹிந்து முன்னேற்றக் கழகம்.
ஜய ஜய சங்கரா.



தகவல் குமுதம் பக்தி ஸ்பெஷல்..26-03-2015


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"















தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

"அம்பாளுக்கு ஒண்ணு பண்ணினா அது
அகிலாண்டங்களுக்கும் சேரும்"
என்று மஹாபுருஷர் கூறுவாரே, அதற்கேற்ப
லோகத்திற்கெல்லாம் அவர் தினமும் புரியும்
விருந்துபசாரத்தைச் சுவைப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காஞ்சி காமாக்ஷிக்கு
ஸஹஸ்ர நாம ஹாரம் செய்து சூட்டியது 
நினைவிருக்கலாம்.அப்போது சொன்னார்;

"அம்மாவுக்கு ஊரெல்லாம் பிச்சை வாங்கி ஆயிரம்
பவுன்லே நகை பண்ணிப் போட்டுட்டேன்.
ஆயிரம் பவுன்னா எவ்வளவு வெய்ட்?
அம்மா அத்தனை பாரம் தங்கணும்னா
அவவயத்துக்கும் நன்னாப் போட்டாகணும்.
(நைவேத்யம்) 

அதனால இன்னிலேருந்து மடத்துக்கு பிக்ஷைன்னு
ஆஹார வஸ்துக்கள் காணிக்கை வெக்கற
மாதிரியே அம்பாளுக்கும் பண்ணிப்பிடணும்."

இவ்வாறு ஜகதீச்வரிக்கு ஜகத்குரு நித்தியப்படியாக
ஏற்பாடு செய்துவிட்ட அன்ன கைங்கரியத்தால்தான்
அந்த ஆண்டிலிருந்து நம் நாட்டில் உணவுப்
பற்றாக்குறை நீங்கி, ஏற்றுமதி செய்யுமளவுக்கு
அபிவிருத்தி கண்டிருக்கிறோமென்று அடியார்கள்
நம்பினால் அதில் நியாயமிருக்கவே செய்கிறதல்லவா?








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு,முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் மகா சுவாமிகளுடன் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்..


காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் 

கொடுத்த வாக்கு,





                           




ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது."


முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் மகா சுவாமிகளுடன் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்...
எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அய்யர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என்றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினே?’ என்றார்.



‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.
‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.
சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.


எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன். சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள்.
முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, May 6, 2015

"தேசியமும் தெய்வீகமும்"


         "தேசியமும் தெய்வீகமும்"

மகாபெரியவர் ஒருசமயம் மேற்கு வங்காள மாநிலம், மித்னாபூருக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு வந்த தகவல், சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் எல்லாருமே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். 


தேசபக்தியுடன் இந்து மத உணர்வும் அவர்கள் ரத்தத்தில் கலந்திருந்தது. அவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்களும் இருந்தனர். தேசத்தின் நலனைப் பெரிதெனக் கருதி, சிறைக்கம்பிகளுக்குள் சிக்குண்டு போனவர்கள்.

அவர்களில் பலருக்கு ஸ்ரீசுவாமிகளை எப்படியாவது தரிசித்து விடவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அவர்கள் சிறை அதிகாரியைச் சந்தித்து, ""நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மகாசுவாமிகளைத் தரிசிக்க விரும்புகிறோம். நீங்கள் என்ன நிபந்தனை விதித்தாலும், அதற்கு கட்டுப்படுகிறோம். எங்களை வெளியே அனுப்ப வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரியும் சில நிபந்தனைகளை விதித்து, மாலை ஆறுமணிக்குள் நிச்சயம் ஜெயிலுக்கு வந்து விட வேண்டும் எனக்கூறி அனுமதி வழங்கினார். எல்லாக் கைதிகளும் அவரிடம் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து, மகாசுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அதற்கே மாலை 5.30 மணி ஆகி விட்டது. சுவாமிகள், அப்போது தான் நித்ய பூஜையை முடித்து விட்டு, சிறிது ஓய்வு எடுப்பதற்காக, ஒரு தனி இடத்திற்குச் சென்றிருந்தார்.

கைதிகள் எல்லாரும் மடத்து ஊழியர்களிடம் தாங்கள் அவசரமாக ஜெயிலுக்குத் திரும்ப வேண்டும் என்பதால், சுவாமியை உடனே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்கள். ஊழியர்களும், ""இன்னும் பத்து நிமிடம் மட்டும் பொறுங்கள். சுவாமி தரிசனம் தந்து விடுவார்,'' என உறுதியளித்தனர்.

ஆனால் கைதிகளோ""ஐயா! நாங்கள் ஆறு மணிக்குள் சிறைக்கு செல்லா விட்டால், அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியிருக்கும். அப்படி நாங்கள் உயிர்விடவும் அஞ்சவில்லை. ஆனால், ஆறு மணி வரை சுவாமிகள் வராவிட்டால், அவரது தரிசனம் கிடைக்காமலேயே இறந்து போவோமே என்று தான் வருந்துகிறோம்,'' என்று உருக்கமாகக் வேண்டுகோள் வைத்தார்கள். 

இதற்குள் நேரம் ஆறுமணியை நெருங்கி விட்டது. கைதிகள் வருத்தத்துடன் சிறை நோக்கி நகர்ந்தார்கள். அப்போது, சுவாமிகள் வெளியே வந்து ஊழியர்களிடம், ""தரிசனத்துக்கு யாராவது வந்தார்களா?'' என்று கேட்டார்கள். கைதிகள் சிலர் வந்து இப்போது தான் போகிறார்கள் என்ற தகவலை ஊழியர்கள் சொன்னார்கள்.

அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று ஊழியர்களை அவசரப்படுத்தினார் மகாசுவாமி. ஊழியர்களும் ஓடிச்சென்று அவர்களை அழைத்து வந்தனர். எல்லாரும் சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். 

இனி உயிரே போனாலும் பரவாயில்லை என்ற பெருமித உணர்வு அவர்களின் முகங்களில் தெரிந்தது.

அவர்கள் சுவாமியிடம், ""இந்த தேசம் அந்நியர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் சிரமப்படுகிறார்கள். நாடு சுதந்திரம் அடைய சுவாமிகள் அனுக்கிரஹம் புரிய வேண்டும்,'' என்று வேண்டினார்கள். பிறகு சுவாமியிடம் உத்தரவு பெற்று சிறைக்குத் திரும்பினார்கள். 

அந்தக் கைதிகள் தங்களுக்காக சுயநலமுள்ள கோரிக்கைகளை வைக்காமல், தேசத்தின் நலனுக்காக கோரிக்கை வைத்தது கண்ட மகாசுவாமிகள் மகிழ்ந்தார்.










ன்றி : தினமலர்  --  ஜனவரி 06,2015,



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.