Tuesday, May 12, 2015

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"















தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

"அம்பாளுக்கு ஒண்ணு பண்ணினா அது
அகிலாண்டங்களுக்கும் சேரும்"
என்று மஹாபுருஷர் கூறுவாரே, அதற்கேற்ப
லோகத்திற்கெல்லாம் அவர் தினமும் புரியும்
விருந்துபசாரத்தைச் சுவைப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காஞ்சி காமாக்ஷிக்கு
ஸஹஸ்ர நாம ஹாரம் செய்து சூட்டியது 
நினைவிருக்கலாம்.அப்போது சொன்னார்;

"அம்மாவுக்கு ஊரெல்லாம் பிச்சை வாங்கி ஆயிரம்
பவுன்லே நகை பண்ணிப் போட்டுட்டேன்.
ஆயிரம் பவுன்னா எவ்வளவு வெய்ட்?
அம்மா அத்தனை பாரம் தங்கணும்னா
அவவயத்துக்கும் நன்னாப் போட்டாகணும்.
(நைவேத்யம்) 

அதனால இன்னிலேருந்து மடத்துக்கு பிக்ஷைன்னு
ஆஹார வஸ்துக்கள் காணிக்கை வெக்கற
மாதிரியே அம்பாளுக்கும் பண்ணிப்பிடணும்."

இவ்வாறு ஜகதீச்வரிக்கு ஜகத்குரு நித்தியப்படியாக
ஏற்பாடு செய்துவிட்ட அன்ன கைங்கரியத்தால்தான்
அந்த ஆண்டிலிருந்து நம் நாட்டில் உணவுப்
பற்றாக்குறை நீங்கி, ஏற்றுமதி செய்யுமளவுக்கு
அபிவிருத்தி கண்டிருக்கிறோமென்று அடியார்கள்
நம்பினால் அதில் நியாயமிருக்கவே செய்கிறதல்லவா?








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: