Tuesday, May 12, 2015

காஞ்சிப் பெரியவரைப் பற்றி இந்துத் துறவி ராம கோபாலன் அவர்கள்.



 காஞ்சிப் பெரியவரைப் பற்றி 

 இந்துத் துறவி 
ராம கோபாலன் அவர்கள்.












காஞ்சிப் பெரியவரைப் பற்றி எனக்கு நன்றாகவே
தெரியும். அவராக விரும்பினால் மட்டுமே பேசுவார்.
எனக்கு வியப்புத் தருகிற அம்சம் என்னவென்றால்
நான் காஞ்சி மடத்துக்குச் சென்ற ஒவ்வொரு முறையும்
மௌனம் காக்காமல் என்னிடம் ஆத்மார்த்தமாகப்
பேசியிருக்கிறார். அந்த பாக்யம் என் பேறு!!
அவரை சந்திக்க எத்தனையோ அரசியல்வாதிகள்
வந்திருந்தபோதிலும் ஒரு முறை கூட அவர் எந்தக்
கட்சியுடனும் அரசியலுடனும் அவர் சம்பந்தப் படுத்திக்
கொண்டதில்லை. ஆனால் உலகளவில் ஆதிக்க அரசியல்
எப்படி இருந்தது என்பது பற்றித் தெரிந்தும் அவர் அரசியலில்
இருந்து வெகு தூரத்தில் விலகியிருந்தார்.
நான் தலியில் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில்
ஆஸ்பத்ரியில் இருந்தபோது எனக்குப் ப்ரசாதம்
அனுப்பியிருந்தார். அதனை என் வாழ் நாள் முழுதும்
மறக்க இயலாது.

ஆஸ்பத்ரியில் டிஸ்சார்ஜ் ஆகி காஞ்சி மடத்துக்குப்
போனபோது பாலப் பெரியவாளுக்கு யாக சாலையில்
வைத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னை
உட்காரச் சொன்னார். பாடம் முடிந்தவுடன் என் உடல்
நிலை பற்றி விஜாரித்தார்.என்னைச் சுற்றி மூன்று
சக்கரங்கள் போட்டார்.எனக்கு அதன் அர்த்தம்
விளங்கவில்லை. ஜயேந்த்ர பெரியவாளும், பாலப்
பெரியவாளும் என்னிடம் ''இதுபோல் யாரிடமும்
அக்கறை எடுத்துக் கொண்டதில்லை'' என்றார்கள்.
ஏதோ உயர்ந்த நோக்கத்தில்தான் அவ்வாறு
சக்ரம் போட்டிருப்பார்கள் எனத் தோன்றியது.
பற்றற்ற நிலைக்கு அவர் ஓர் உதாரணம்.அவர்
சித்தியாவதற்கு முன் காஞ்சி சென்றிருந்தேன் .
ஜயேந்த்ர பெரியவாளிடம் கங்கைக் கரையில்
ஸஹஸ்ர காயத்ரி செய்யும் ஒருவரைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்''நீதான்
ஒரு கோடி காயத்ரி ஜபத்தை முடிச்சிருக்கியே''
என்றார். நான் ''இல்லை, கொஞ்சம் குறைச்சலாகத்தான்
செய்திருப்பேன்''என பதில் சொன்னேன். ''எந்த வருஷம்
முதல் செய்யிகிறாய்'' என்று என்னைத் திரும்பக் கேட்டார்.
''1935லிருந்து ''என்று பதில் சொன்னேன்.அதான் முடிச்சிட்டயே''
என்று சொன்னார் ஜயேந்த்ரர்.


பிறகு பெரியவாளை அவர் சித்தியாவதற்கு முன்
பார்க்கச் சென்றேன்.ஒரே கூட்டம். தடுப்புக்காக
மர பென்ச் ஒன்றைப் போட்டிருந்தார்கள்.அதைத்
தாண்டி வரச் சொன்னார் பெரியவர். அருகில் போனேன்.
தொண்டர் ஒருவர் ''இவருக்கு உடம்பு சரியில்லை,
அதனால் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கார்'' என்று
சொன்னார். என்னை நிமிர்ந்து பார்த்தார் பெரியவர்
''நான் என் உடம்பைப் பற்றிக் கவலைப் படவில்லை,
அங்கங்கே மத மாற்றங்கள் நடக்கிறது, இது
பூதாகாரமாகாமல் தடுக்க அனுகரஹம் பண்ண வேண்டும்''
என சொன்னேன். சிறிது நேரம் கண்ணை மூடியிருந்தார்
ஆமாம் என்பது போல். பிறகு ஆசிர்வதித்து அனுப்பினார்,
அதுதான் கடைசி சந்திப்பு.
ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன்,
அவருடைய மறைவு என் மனடில் எவ்வித வெற்றிடத்தையும்
ஏற்படுத்தவில்லை.மாறாக அவர் இப்போதும் என்னுடன்
இருப்பதாகவே உணர்கிறேன்.
இதனைப் பகிர்ந்தவர் இந்துத் துறவி எனக் கருதப்படும்
ராம கோபாலன் அவர்கள். ஹிந்து முன்னேற்றக் கழகம்.
ஜய ஜய சங்கரா.



தகவல் குமுதம் பக்தி ஸ்பெஷல்..26-03-2015


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"

பெரியவாளின் அன்ன கைங்கரியம்"















தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

"அம்பாளுக்கு ஒண்ணு பண்ணினா அது
அகிலாண்டங்களுக்கும் சேரும்"
என்று மஹாபுருஷர் கூறுவாரே, அதற்கேற்ப
லோகத்திற்கெல்லாம் அவர் தினமும் புரியும்
விருந்துபசாரத்தைச் சுவைப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காஞ்சி காமாக்ஷிக்கு
ஸஹஸ்ர நாம ஹாரம் செய்து சூட்டியது 
நினைவிருக்கலாம்.அப்போது சொன்னார்;

"அம்மாவுக்கு ஊரெல்லாம் பிச்சை வாங்கி ஆயிரம்
பவுன்லே நகை பண்ணிப் போட்டுட்டேன்.
ஆயிரம் பவுன்னா எவ்வளவு வெய்ட்?
அம்மா அத்தனை பாரம் தங்கணும்னா
அவவயத்துக்கும் நன்னாப் போட்டாகணும்.
(நைவேத்யம்) 

அதனால இன்னிலேருந்து மடத்துக்கு பிக்ஷைன்னு
ஆஹார வஸ்துக்கள் காணிக்கை வெக்கற
மாதிரியே அம்பாளுக்கும் பண்ணிப்பிடணும்."

இவ்வாறு ஜகதீச்வரிக்கு ஜகத்குரு நித்தியப்படியாக
ஏற்பாடு செய்துவிட்ட அன்ன கைங்கரியத்தால்தான்
அந்த ஆண்டிலிருந்து நம் நாட்டில் உணவுப்
பற்றாக்குறை நீங்கி, ஏற்றுமதி செய்யுமளவுக்கு
அபிவிருத்தி கண்டிருக்கிறோமென்று அடியார்கள்
நம்பினால் அதில் நியாயமிருக்கவே செய்கிறதல்லவா?








Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு,முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் மகா சுவாமிகளுடன் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்..


காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் 

கொடுத்த வாக்கு,





                           




ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது."


முன்னாள் அமைச்சர் கே. ராஜாராம் மகா சுவாமிகளுடன் தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்...
எனக்கு விவசாய இலாகா கொடுக்கப்பட்ட நேரமோ, வறட்சியான நேரம். மழையே கிடையாது. நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
காஞ்சி மகாசுவாமிகளின் நினைவுதான் வந்தது. காஞ்சிப் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காஞ்சி மடத்தில் நுழைந்தேன். அங்குள்ள காரியஸ்தர் திரு. நீலகண்ட அய்யர் என்னைச் சிறு வயது முதலே அறிந்தவர். அவர் என்னை வரவேற்று, ‘மகாசுவாமிகள், ‘நீ வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். தற்போது மேடையில் படுத்து அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டார்’ என்றார்.
நான் ‘சற்று தூரத்தில் நின்று, சத்தமில்லாமல் தரிசித்து விட்டுப் போகிறேன்’ என்று மகாசுவாமிகள் படுத்திருந்த மேடைக்கு எதிரில் போய் நின்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். சில நிமிடங்கள் கழிந்தன. மகா சுவாமிகள் சற்றுப் புரண்டு திடீர் என எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்ததும், ‘எப்பொழுது வந்தே?’ என்றார்கள். ‘இப்பொழுதுதான் வந்தேன்’ என்றேன். ‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினே?’ என்றார்.



‘நாட்டில் மழையேயில்லை. இந்த நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எனக்கு விவசாய இலாகாவைத் தந்துள்ளார்கள். பூமியெல்லாம் வெடித்துக் கிடக்கிறது. மழையில்லாத நாட்டில், எப்படி நல்ல பேரோடு விவசாய அமைச்சராக வாழ முடியும்? என் பேரே கெட்டுவிடும். தாங்கள் யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் மழைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே வந்தேன்’ என்றேன்.
‘இதற்காகத்தான் வந்தாயா?’ என்றார். ‘ஆம்!’ என்றேன்.
சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக, தியான நிலையில் இருந்தார். சற்று நேரம் கழித்து, ‘நாளைக்கே காமாட்சி அம்மன் கோயிலில், பதினைந்து நாட்களுக்கு யாகம் நடைபெற ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.


எனக்கு மாலையில் செங்கல்பட்டில் நிகழ்ச்சி. முடித்துக்கொண்டு காரில் ஏறினேன். சாப்பிட்டவுடன் வண்டி, ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு வண்டி நெளியத் தொடங்கிற்று. சீட்டில் படுத்திருந்த என்னால் தூங்க முடியவில்லை. எழுந்து பார்க்கிறேன். நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள்.
முன் கண்ணாடி மீது குடத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல் மழை கொட்டுகிறது. மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர் கிடைத்ததனால், என் இலாகாவான குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள், மகாசுவாமிகளின் ஆசியால் நாட்டுக்கும் எனக்கும் கிடைத்தன.”










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Wednesday, May 6, 2015

"தேசியமும் தெய்வீகமும்"


         "தேசியமும் தெய்வீகமும்"

மகாபெரியவர் ஒருசமயம் மேற்கு வங்காள மாநிலம், மித்னாபூருக்கு விஜயம் செய்தார். அவர் அங்கு வந்த தகவல், சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் எல்லாருமே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். 


தேசபக்தியுடன் இந்து மத உணர்வும் அவர்கள் ரத்தத்தில் கலந்திருந்தது. அவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்களும் இருந்தனர். தேசத்தின் நலனைப் பெரிதெனக் கருதி, சிறைக்கம்பிகளுக்குள் சிக்குண்டு போனவர்கள்.

அவர்களில் பலருக்கு ஸ்ரீசுவாமிகளை எப்படியாவது தரிசித்து விடவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அவர்கள் சிறை அதிகாரியைச் சந்தித்து, ""நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மகாசுவாமிகளைத் தரிசிக்க விரும்புகிறோம். நீங்கள் என்ன நிபந்தனை விதித்தாலும், அதற்கு கட்டுப்படுகிறோம். எங்களை வெளியே அனுப்ப வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரியும் சில நிபந்தனைகளை விதித்து, மாலை ஆறுமணிக்குள் நிச்சயம் ஜெயிலுக்கு வந்து விட வேண்டும் எனக்கூறி அனுமதி வழங்கினார். எல்லாக் கைதிகளும் அவரிடம் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து, மகாசுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். அதற்கே மாலை 5.30 மணி ஆகி விட்டது. சுவாமிகள், அப்போது தான் நித்ய பூஜையை முடித்து விட்டு, சிறிது ஓய்வு எடுப்பதற்காக, ஒரு தனி இடத்திற்குச் சென்றிருந்தார்.

கைதிகள் எல்லாரும் மடத்து ஊழியர்களிடம் தாங்கள் அவசரமாக ஜெயிலுக்குத் திரும்ப வேண்டும் என்பதால், சுவாமியை உடனே தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்கள். ஊழியர்களும், ""இன்னும் பத்து நிமிடம் மட்டும் பொறுங்கள். சுவாமி தரிசனம் தந்து விடுவார்,'' என உறுதியளித்தனர்.

ஆனால் கைதிகளோ""ஐயா! நாங்கள் ஆறு மணிக்குள் சிறைக்கு செல்லா விட்டால், அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியிருக்கும். அப்படி நாங்கள் உயிர்விடவும் அஞ்சவில்லை. ஆனால், ஆறு மணி வரை சுவாமிகள் வராவிட்டால், அவரது தரிசனம் கிடைக்காமலேயே இறந்து போவோமே என்று தான் வருந்துகிறோம்,'' என்று உருக்கமாகக் வேண்டுகோள் வைத்தார்கள். 

இதற்குள் நேரம் ஆறுமணியை நெருங்கி விட்டது. கைதிகள் வருத்தத்துடன் சிறை நோக்கி நகர்ந்தார்கள். அப்போது, சுவாமிகள் வெளியே வந்து ஊழியர்களிடம், ""தரிசனத்துக்கு யாராவது வந்தார்களா?'' என்று கேட்டார்கள். கைதிகள் சிலர் வந்து இப்போது தான் போகிறார்கள் என்ற தகவலை ஊழியர்கள் சொன்னார்கள்.

அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று ஊழியர்களை அவசரப்படுத்தினார் மகாசுவாமி. ஊழியர்களும் ஓடிச்சென்று அவர்களை அழைத்து வந்தனர். எல்லாரும் சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். 

இனி உயிரே போனாலும் பரவாயில்லை என்ற பெருமித உணர்வு அவர்களின் முகங்களில் தெரிந்தது.

அவர்கள் சுவாமியிடம், ""இந்த தேசம் அந்நியர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் சிரமப்படுகிறார்கள். நாடு சுதந்திரம் அடைய சுவாமிகள் அனுக்கிரஹம் புரிய வேண்டும்,'' என்று வேண்டினார்கள். பிறகு சுவாமியிடம் உத்தரவு பெற்று சிறைக்குத் திரும்பினார்கள். 

அந்தக் கைதிகள் தங்களுக்காக சுயநலமுள்ள கோரிக்கைகளை வைக்காமல், தேசத்தின் நலனுக்காக கோரிக்கை வைத்தது கண்ட மகாசுவாமிகள் மகிழ்ந்தார்.










ன்றி : தினமலர்  --  ஜனவரி 06,2015,



Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

"மாண்டவர் மீண்டால்?"


              "மாண்டவர் மீண்டால்?"





சொன்னவர்-சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீபரமேசுவரன் ஆதிசங்கரராக அவதாரம் செய்து,
வேதம்,வேதாந்தம்,வைதீகதர்மம் முதலியவற்றை
அக்காலத்தில் ரட்சித்ததை சங்கர சரித்திரங்கள்
கூறுகின்றன.

ஆனால் நமது காஞ்சி பீடாதிபதிகள் ஸ்ரீசந்திர
சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில்
பார்த்தவர்கள், ஆதிசங்கரரின் சரித்திரத்தை
நன்கு படித்தவர்களாக இருந்தால், அந்த ஆதிசங்கரரே
இவர் என்று நிச்சயித்துவிடுவார்கள்.

தீட்சிதர் கூறும் ஓர் அனுபவம் கீழே;

"சில வருடங்களுக்கு முன் சுக்ர வாரத்தன்று பக்தர்கள்
பூஜை செய்துவிட்டு எழுந்து நின்றார்கள்.ஆயிரக்
கணக்கான சுமங்கலிகள் அங்கே கூடி இருந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஒரு ஸ்திரீ நெற்றியில் குங்குமம்
இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

அந்த அம்மாளை ஸ்ரீஆச்சாரியாள், சந்நிதிக்கு வரும்படி
ஜாடை காட்டி அழைத்தார்கள். ஆனால் அந்த அம்மாள்
வராமல், கண்ணீர் உகுத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
மீண்டும் அழைத்து அவளை நமஸ்காரம் செய்து கொள்ள
அனுமதித்தார் சுவாமிகள்.

"ஏன் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவில்லை?"
என்று கேட்டார்கள்.

தன் கணவன் யுத்தத்தில் இறந்துவிட்டதாகப் பேப்பரில்
மூன்று முறை செய்திகள் வந்து ஆறுமாதங்கள் 
ஆகிவிட்டதாகவும், இனி கர்மாக்களை எப்படிச்
செய்யவேண்டும் என்பதைச் சுவாமிகளிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ளவே, தரிசனத்துக்கு வந்திருப்பதாகவும்
கதறிக் கூறினாள் அந்தப் பெண்மணி.

உடனே ஆச்சாரியாள் கை நிறையக் குங்குமத்தை அள்ளி
எடுத்து அந்த அம்மாள் கையில் கொடுத்து
"வருத்தப்படாதே! உன் கணவன் உயிருடன்தான் இருக்கிறான்.
கூடிய சீக்கிரம் வந்து சேருவான்!" எனக் கூறினார்.

அதுபோலவே அடுத்தவாரமே அந்த அம்மாளின் கணவன்
வந்து சேர்ந்துவிட்டான்.!

அவர்கள் குடும்பத்துடன் வந்து ஆச்சாரியாளைத் தரிசித்து
நமஸ்கரித்துவிட்டுப் போனார்கள். அப்போது அந்தக்
குடும்பம் அடைந்த ஆனந்தத்தை எப்படி விவரிப்பது.?"














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

வித்தை காட்டி பிழைச்சுக்கோ!

                 வித்தை காட்டி பிழைச்சுக்கோ!














"வித்தைக்காரன் குரங்கை ஆட்டுறதைப் போல என்னை படுத்துறியே?' என்று பிறரால் மனம் புண்படும்போது வருத்தத்தில் சொல்வார்கள்.

ஆனால், அருளாளர் ஒருவர் இறைவனிடம், "குரங்காட்டி போல என்னை வைச்சுப் பிழைப்பு நடத்திக்கோ!' என்று மனம் உவந்து சொல்கிறார். அவர் வேறு யாருமல்ல! காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் தான்.

""பரமேஸ்வரா! வெறுமனே கையில் கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்கிறாயே! என் குரங்கு மனசை பக்தி என்னும் கயிற்றால் கட்டி உன் கையில் பிடித்துக் கொள். நான் உன்னை தொடர்ந்து வருகிறேன். குரங்காட்டி போல என்னை வைத்து வித்தை காட்டி பிழைத்துக் கொள். இதனால், உனக்கும் பிழைப்பு நடக்கும். நானும் பிழைத்துக் கொள்வேன்!'' என்று வேடிக்கையாக வேண்டுகிறார். 

குரங்கு இங்குமங்கும் தாவுவது போல, மனமும் எப்போதும் ஆசைவயப்பட்டு தாவியபடி இருக்கும். ஆனால், வித்தைக்காரனான குரங்காட்டியிடம் குரங்கு கட்டளைக்கு கீழ்ப்படிவது போல, மனம் இறைவனின் வசமாகி விட்டால், அவரையன்றி வேறு எதையும் சிந்திக்காது என்பதைச் சங்கரர் இவ்வாறு உணர்த்துகிறார்.










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Tuesday, May 5, 2015

கடல் கடந்து போவது…

                        கடல் கடந்து போவது…











பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!



ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை

முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திருரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால் சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்குநிதர்சனமாக தெரிந்திருந்தது. 

ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்

தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே 

கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து  கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை நீட்டிவிட்டார்…….


பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! 

ரா.கணபதிக்கோ   நிம்மதி பெருமூச்சு!


“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”


சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும்!




                


Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.