Saturday, June 6, 2015

சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)-Saidapet Sri Karaneeswarar koil kumbabisekam -07-06-2015 @10 AM


சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (07/06/2015)

சென்னையில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் சைதாப்பேட்டை அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

எதிர்வரும் 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 
நேரம் : காலை 08.35 மணிக்குமேல் 10.05க்குள்
மஹா கும்பாபிஷேக வைபவம் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இறை அடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப்பெற்றேகும் வண்ணம் வேண்டிக்கொள்கின்றோம்.

ஸ்தல வரலாறு....

எந்தக் காரணத்திற்காகவும் இந்த ஈசனை வந்து வணங்கினால் அந்தக் காரணம் எல்லாம் கனிவாக நிறைவேறும். அதனாலேயே இந்த ஈஸ்வரன், காரணீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பிகை சொர்ணாம்பிகை. தூண்களிலும், சுவர்களிலும் காரணீஸ்வரர் கருவறை மேல் விதானத்திலும் அநேக மீன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து இக்கோயில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

கமிகா ஆகமப்படி இக்கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் போது எட்டாம் நாள் அன்று நடத்தப்படும் திருஞான சம்பந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். குறிப்பாக கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அக்காட்சியைக் காண்பதால் பிறக்கும் குழந்தை கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறார்கள்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!



-------------------------------------------------------------------------------------------------------------
Maha Kumbabisekam of Sri Karaneeswara koil  saidapet will take place on 07.06.2015 at 10 AM .

In the evening  Thirukalyana will take place and  Sri Somasankadar will give darshan 



























No comments: