Tuesday, March 31, 2015

"இதுவும் பூஜைதான்!" மஹபெரியவா





"இதுவும் பூஜைதான்!" 

தொகுத்தவர்-ரா. கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார்.
வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த அதிவினய பக்தியுடன் கைகூப்பி நின்றார்கள்.காணிக்கையுங்கூட ஸமர்ப்பித்தார்கள்.

தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக, அவர்களது நலன்களை, நலன்கள் இல்லாமையும் கேட்டுக் கொண்டார்-ஓடாமல்,பறக்காமல் நின்று நிதானமாக!

இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர  மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும்-துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து 
முடிவு செய்தார்.

இதிலேயே ஓரளவு நேரம் சென்றதில் அடுத்த முகாம் அடையத் தாமதமாகுமே என்று மானேஜரும் மற்ற பரிவாரத்தினரும் எண்ணினர்.

ஆனால் ஏழையர் தெய்வமோ நிம்மதியாக உட்கார்ந்து விட்டது. சிப்பந்திகளை அனுப்பி அவ்வளவு நந்தன்-
நந்தினிகளுக்கும் வேட்டி புடவை வாங்கி வரச் சொல்லி விட்டது. அந்தச் சிற்றூரில் அவ்வளவு ஜவுளி ஸ்டாக் இல்லை என்று தெரிந்த பின்னும் விடாமல் அருகிலுள்ள சற்றுப் பெரிய ஊரான குடவாசலுக்கே போய் வாங்கிவர ஆணை பிறப்பித்தது.

அந்த நடுவழி மர நிழலிலேயே அவர்களுக்கு 'திண்டி'யாக ஒரு ஸாம்பார் சாதமும் தயாரிக்க உத்தரவிட்டுவிட்டது. இதெல்லாம் முடித்துப் புறப்பட இரண்டு மூன்று மணி அவகாசம் பிடிக்குமே, வெயிலும் நன்றாக ஏறி விடுமே,அதற்கப்புறம் அடுத்த முகாம் போய் பெரியவாளுக்கே உரிய அந்தப் பல மணி நேர பூஜை செய்வதென்றால் மிகவும் ஆயாஸமாகிவிடுமே! இதை எண்ணி மானேஜர் கவலைப்பட்டார்.

"இப்பவே டயம் ஆயிடுத்து. இன்னும் உத்திரவானதை யெல்லாம் பண்ணிட்டுப் போய் அப்புறம் பூஜை....." என்று அவர் சொல்லிவரும் போதே......

ஸ்ரீசரணர் (பெரியவா) குறிக்கிட்டு,  "இதுவும் பூஜைதான்!" என்றார்.














Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


"நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து - மஹா பெரியவா

                                    



ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
பச்சைப் பட்டு பாவாடை
சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.
ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்கா

கவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.
வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, "ஊஹூம்!, முடியாது... இப்பவே!"ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.
குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!"னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.
பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.
அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.
செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.
எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.
பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.
அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.
இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.
ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.
வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.
இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.
மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். "அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?" என்று கேட்டார்.
திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.
"நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.
தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா...! அதனால கவலையேபடாதேம்மா...!"
அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !















              

Thanks to  Periva Forum

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

Sunday, March 8, 2015

மூலவர்
:
சவுந்தரேஸ்வரர்
உற்சவர்
:
-
அம்மன்/தாயார்
:
-
தல விருட்சம்
:
வன்னி, கொன்றை, வில்வம்
தீர்த்தம்
:
-
ஆகமம்/பூஜை
:
-
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்
:
-
ஊர்
:
சைதாப்பேட்டை
மாவட்டம்
:
மாநிலம்
:
தமிழ்நாடு     
     

பாடியவர்கள்:
 திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்




 தல சிறப்பு: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.



திறக்கும் நேரம்:




காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:



அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.

 பொது தகவல்:




இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

Thursday, March 5, 2015

"பெரியவாளின் சரித்திர ஞானம்"













"பெரியவாளின் சரித்திர ஞானம்"

சொன்னவர்-டாக்டர் ஸி.கே.ராமன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயம் நான் மகா பெரியவாளை தரிசனம்
செய்யப் போன போது அங்கு வயதான ஒருவர்

பெரியவாள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"உங்க பேர்?"

"ராமஸ்வாமி அய்யர்"

"ஊர்?"

"கல்பட்டு"

"திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிறதே அந்தக் கல்பட்டு தானே?"

"ஆமாம்"

"சரி, உங்க ஊருக்கு ஏன் கல்பட்டு என்று பேர் வந்தது தெரியுமா?" (சற்று நேரம் மௌனம்)

"பூர்வீகமே அந்த ஊர் தானே?"

"ஆமாம்"

"பின்னே இது ஏன் தெரியவில்லை?"

"நான் சின்ன வயசிலேயே டெல்லிக்குப் போய்விட்டேன்."

"அதனால் இது தெரியக்கூடாதா?"

"அந்த நாள்ல பல்லவ ராஜாக்கள் எல்லாம் ஆனைகளைக் கட்டறதுக்காக அங்கிருந்துதான் கல்லைக் கொண்டு வருவார்கள். அதனால் தான் அந்த ஊருக்கு கல்பட்டு என்று பேர் வந்தது. இது ரொம்பப் பிரசித்தம்."

மகா பெரியவாளின் இத்துணை நுட்பமான சரித்திர ஞானத்தை நேரில் தெரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

எழுத்தாளர் ஜெயகாந்தன் -"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள் முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"









சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எனது இனிய நண்பர்.
சில விஷயங்களில் எங்களுக்குள் கருத்து
வேறுபாடு இருந்தாலும்,மனம் விட்டுப் பேசிக்
கொள்வதில் எங்கள் இருவருக்குமே ஓர்
அலாதியான திருப்தி கிடைப்பதுண்டு.

பேசிக்கொண்டே இருந்தபோது அன்று,
"காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவர்களைப்
பார்க்கணுமே?" என்றார். திடீரென்று அவர் அப்படிச்
சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.
காரணத்தைக் கேட்டேன்.

"கனவிலே அவர் வந்தார். நேரிலே அவரைப் பார்த்து
சில சந்தேகங்களைப் பற்றிக் கேட்கணும் என்று ஓர்
ஆசை!" என்றார் ஜெயகாந்தன். அவரை நான் 
காஞ்சிபுரத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன்.

எஸ்.வி.சுப்பையாவின் தோட்டத்தில் சிறு குடிலில்
அமைதியாகத் தங்கி இருந்தார் பரமாச்சாரிய
சுவாமிகள்.பிரமுகர்களும் பக்தர்களும் பலர்
வந்திருந்தார்கள். அப்போது கோகர்ணம்-கஜகர்ணம்
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக்
கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் எளிமையில்
மயங்கி நின்றார் ஜெயகாந்தன்.

எதுவுமே பேசவில்லை.தரிசனம் அப்படியே முடிந்தது.

வெளியே வந்ததும் அவரிடம் "என்ன ஆயிற்று?
ஏன் இப்படி?" என்று கேட்டேன். "ஏதோ கேட்க வேண்டும்
என்று சொன்னீர்களே?" என்றும் ஞாபகப்படுத்தினேன்.

அவர் ஒரு கணம் யோசித்துவிட்டு,
"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள்
முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"
என்று கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.

மற்றொரு முறை தரிசனத்துக்குப் போயிருந்தபோது
மகா சுவாமிகள் தனிக்குடிலில்,கிணற்றின் அருகே
மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.அவரைப் பார்க்க
கிறிஸ்துவ கன்னிமார்கள் கிணற்றின் மறுபுறம்
மண்டியிட்டபடி முணுமுணுத்தது தெரிந்தது.

தரிசனம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது
அவர்களிடம் கேட்டேன்.

"நாங்கள் விரும்பியதை மௌனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தோம். அவ்வளவிற்கும் அவர் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்!" என்றார்கள்.

நான் பிரமித்துப் போனேன். மௌனத்திலும் விளக்கம்
தந்து, தட்சிணாமூர்த்தியாக நின்ற முனிவரின் 
பெருமையை எண்ணி வியந்து போனேன்.












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

THANKS FOR JAYAKANTHAN PHOTOS POSTED BY HIS FOLLOWER