Sunday, March 8, 2015

மூலவர்
:
சவுந்தரேஸ்வரர்
உற்சவர்
:
-
அம்மன்/தாயார்
:
-
தல விருட்சம்
:
வன்னி, கொன்றை, வில்வம்
தீர்த்தம்
:
-
ஆகமம்/பூஜை
:
-
பழமை
:
1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்
:
-
ஊர்
:
சைதாப்பேட்டை
மாவட்டம்
:
மாநிலம்
:
தமிழ்நாடு     
     

பாடியவர்கள்:
 திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்




 தல சிறப்பு: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.



திறக்கும் நேரம்:




காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:



அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.

 பொது தகவல்:




இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

Thursday, March 5, 2015

"பெரியவாளின் சரித்திர ஞானம்"













"பெரியவாளின் சரித்திர ஞானம்"

சொன்னவர்-டாக்டர் ஸி.கே.ராமன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயம் நான் மகா பெரியவாளை தரிசனம்
செய்யப் போன போது அங்கு வயதான ஒருவர்

பெரியவாள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"உங்க பேர்?"

"ராமஸ்வாமி அய்யர்"

"ஊர்?"

"கல்பட்டு"

"திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிறதே அந்தக் கல்பட்டு தானே?"

"ஆமாம்"

"சரி, உங்க ஊருக்கு ஏன் கல்பட்டு என்று பேர் வந்தது தெரியுமா?" (சற்று நேரம் மௌனம்)

"பூர்வீகமே அந்த ஊர் தானே?"

"ஆமாம்"

"பின்னே இது ஏன் தெரியவில்லை?"

"நான் சின்ன வயசிலேயே டெல்லிக்குப் போய்விட்டேன்."

"அதனால் இது தெரியக்கூடாதா?"

"அந்த நாள்ல பல்லவ ராஜாக்கள் எல்லாம் ஆனைகளைக் கட்டறதுக்காக அங்கிருந்துதான் கல்லைக் கொண்டு வருவார்கள். அதனால் தான் அந்த ஊருக்கு கல்பட்டு என்று பேர் வந்தது. இது ரொம்பப் பிரசித்தம்."

மகா பெரியவாளின் இத்துணை நுட்பமான சரித்திர ஞானத்தை நேரில் தெரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.





Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

எழுத்தாளர் ஜெயகாந்தன் -"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள் முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"









சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எனது இனிய நண்பர்.
சில விஷயங்களில் எங்களுக்குள் கருத்து
வேறுபாடு இருந்தாலும்,மனம் விட்டுப் பேசிக்
கொள்வதில் எங்கள் இருவருக்குமே ஓர்
அலாதியான திருப்தி கிடைப்பதுண்டு.

பேசிக்கொண்டே இருந்தபோது அன்று,
"காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவர்களைப்
பார்க்கணுமே?" என்றார். திடீரென்று அவர் அப்படிச்
சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.
காரணத்தைக் கேட்டேன்.

"கனவிலே அவர் வந்தார். நேரிலே அவரைப் பார்த்து
சில சந்தேகங்களைப் பற்றிக் கேட்கணும் என்று ஓர்
ஆசை!" என்றார் ஜெயகாந்தன். அவரை நான் 
காஞ்சிபுரத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன்.

எஸ்.வி.சுப்பையாவின் தோட்டத்தில் சிறு குடிலில்
அமைதியாகத் தங்கி இருந்தார் பரமாச்சாரிய
சுவாமிகள்.பிரமுகர்களும் பக்தர்களும் பலர்
வந்திருந்தார்கள். அப்போது கோகர்ணம்-கஜகர்ணம்
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக்
கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் எளிமையில்
மயங்கி நின்றார் ஜெயகாந்தன்.

எதுவுமே பேசவில்லை.தரிசனம் அப்படியே முடிந்தது.

வெளியே வந்ததும் அவரிடம் "என்ன ஆயிற்று?
ஏன் இப்படி?" என்று கேட்டேன். "ஏதோ கேட்க வேண்டும்
என்று சொன்னீர்களே?" என்றும் ஞாபகப்படுத்தினேன்.

அவர் ஒரு கணம் யோசித்துவிட்டு,
"எண்ணியது உண்மைதான்.ஆனால் பெரியவர்கள்
முன்னால் நின்ற போது எதுவுமே பேசத் தோன்றவில்லை!"
என்று கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.

மற்றொரு முறை தரிசனத்துக்குப் போயிருந்தபோது
மகா சுவாமிகள் தனிக்குடிலில்,கிணற்றின் அருகே
மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.அவரைப் பார்க்க
கிறிஸ்துவ கன்னிமார்கள் கிணற்றின் மறுபுறம்
மண்டியிட்டபடி முணுமுணுத்தது தெரிந்தது.

தரிசனம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது
அவர்களிடம் கேட்டேன்.

"நாங்கள் விரும்பியதை மௌனமாகக் கேட்டுக்
கொண்டிருந்தோம். அவ்வளவிற்கும் அவர் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்!" என்றார்கள்.

நான் பிரமித்துப் போனேன். மௌனத்திலும் விளக்கம்
தந்து, தட்சிணாமூர்த்தியாக நின்ற முனிவரின் 
பெருமையை எண்ணி வியந்து போனேன்.












Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

THANKS FOR JAYAKANTHAN PHOTOS POSTED BY HIS FOLLOWER

..திருவாசகத்தின் உட்பொருளைக் ..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!" - bY kAVIGNAR VALI ON PARAMACHARYA - MAHAPERIYAVA







"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"

(வாலியின் வேண்டல்)

சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கவிஞர் வாலி ஒரு முறை என்னை மகா சுவாமிகளை தரிசிக்க அழைத்துக் கொண்டு போனார். மகா
சுவாமிகளிடம் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு பதில் பெறவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
என்ன கேட்கப் போகிறாரோ என்று எனக்கு உள்ளூர ஓர் ஆவல் குறுகுறுத்தது.

வாலி உள்ளே வந்தார்.அவர்களுக்கு எதிரே ஒரு மூலையில் நின்று கொண்டார். ஒரு குழந்தையைப்
போலத் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினார். 

எதுவுமே பேசவில்லை. தரிசனம் அப்படியே முடிந்தது. வெளியே வந்ததும் அவரிடம், "என்ன ஆயிற்று?
ஏன் அழுது கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டேன்.

"செய்த பாவங்கள் எல்லாம் கண்முன்னே வந்தன. எனக்கு மனசு தாங்கவில்லை. குமுறிக் குமுறி
அழுதேன்!" என்றார் வாலி.

அப்புறம் அந்த அனுபவத்தை ஓர் அற்புதமான கவிதையாக் எழுதிக் கொடுத்தார்.'ஆனந்த விகடனி'ல்
அது பிரசுரமாயிற்று. அந்த வரிகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.

"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"+











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.



தேரை துள்ளி வெளியே வந்தது -- Mahaperiyavaa

சாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.

ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை மூன்றாகப்
பிரித்துள்ளார்கள்.சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்யவேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண்
கற்களால் தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை அறிவார்கள். 

ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே 'இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது' என்று கூறுவார்கள்.

மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும். தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது. ஒரு ஸமயம் ஒரு சிலை
செய்வதற்காக ஒரூ ஸ்தபதி பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.

உடனே பெரியவா "இந்தக் கல்லில் தேரை இருக்கு"என்றார்கள்.
அந்த ஸ்தபதி "இந்தக் கல்லில் தேரை இல்லை என்று தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்"
என்று விவாதம் செய்தான்.

அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள். உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.

இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது 










Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos  edited by me.

Story of Murugan’s Previous Birth -- Told by Kanchi Paramacharya



 



Story of Murugan’s Previous Birth as told by Kanchi Paramacharya  Maha Periyava in Tamil. It is a bit long but a highly revealing story.

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்

ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.

ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.

இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.

யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.




வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.
இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.

அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.

நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.

ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.
இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.








Courtesy :  https://mahaperiyavaa.wordpress.com
Thanks for the beautiful photos posted by  Siva , Muruga and  Mahaperiyava bhaktas.