Saturday, April 11, 2015

சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்







சங்கர பகவத்பாதாள் தோன்றிய நம்பூதிரிவம்சத்தில்
இன்றைக்கும் வைதீக ச்ரத்தை அடியோடு போய்விடாத
பெருமை இருக்கிறது. பலவித தர்மங்கள் தலைவிரித்தாடிய
சமயத்தில் வேத தர்மத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்காகவே
அவதாரம் செய்ய நினைத்த பரமேஸ்வரன் இருப்பதற்குள் 
எங்கே வேத அத்யயனம் ,அனுஷ்டானமும் நிறைய இருக்கிறது
என்று தேடிப் பார்த்து கேரளத்தில் ,காலடியில் ஒரு நம்பூதிரி
குடும்பத்தில் அவதாரம் பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது.
அவர் காலத்தில் மலையாள மொழியே தோன்றியிருக்கவில்லை.

தமிழ் மொழிதான் அங்கும் இருந்தது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்
அத்யந்த ஸகாவான சேரன் பெருமான் நாயனார் காலத்தில் கூட
கேரளம் தமிழ் பேசின சீமையாகத்தான் இருந்திருக்கிறது. அவர்
தமிழில்தான் திருக்கைலாய உலா என்ற க்ரந்த்தை பாடியிருக்கிறார்.
அவர் மலையாள தேசத்திலுள்ள திருவஞ்சைக் களத்தில் இருந்து
கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தவர்.


'திவ்ய ப்ரபந்தத்தில்'பெருமாள் திருமொழி' என்ற பெயரிலுள்ள
பாசுரங்களைச் செய்த குலசேகர ஆழ்வாரும், திருவனந்தபுரத்திலிருந்து
ஆட்சி செய்தவர்தாம். அப்போதும் அங்கு தமிழ்தான் இருந்திருக்கிறது.
இதற்கெல்லாம் முந்தி, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஈஸ்வரனே
சங்கரராக அவதாரம் செய்தபோது, கேரளம் தமிழ் நாட்டுப் பகுதியில்
தான் இருந்திருக்கிறது . வேதம் ரொம்பவும் ஜீவனோடு இருந்தது
என்பதால் தான் அவர் அங்கு அவதரித்தார் என்பதிலிருந்து தமிழ்
தேசத்துக்கு வேதத்தில் விசேஷ பற்றுதல் இருந்தது தெரிகிறது.











பெரியவாளின் அருளுரை.

ஜய ஜய சங்கரா....

Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks for Adisankara bhaktas for the photos and also 
Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: