Thursday, April 23, 2015

ஐந்தறிவு ஜீவனுக்கும் ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.

             ஐந்தறிவு ஜீவனுக்கும் 
ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணாகடாக்ஷம்.






ஜெகத்குரு ஸ்ரீபரமாச்சார்யாளின் கருணைக்கு கட்டியம் கூறும் வகையில் இன்று காலையில் ஒரு முதியவர் கூறிய நிகழ்வினையே இங்கு பகிர்கின்றேன்.
இந்த நிகழ்வு 1927ம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கலாம் என்று கூறி ஆரம்பித்தார் அவர். அந்த சமயத்தில் மடத்தின் முகாமுடன் நாய் ஒன்று வந்துகொண்டிருந்தது. அசுத்தங்களைத் தொடாத அந்த ஐந்தறிவு ஜீவன், மடம் முகாம் செய்யும் இடங்களிலெல்லாம் தங்கி, இரவில் மடத்தில் கால்நடைகளையும் சாமான்களையும் திருடர்கள் எடுத்துப் போகாமல் பாதுகாத்து வரும். அந்த ஜீவன் மடத்திலிருந்து போடப்படும் அன்னத்தை உட்கொள்ளுமே தவிர, வேறு யாராவது கொடுக்கும் எவ்வித உணவையும் அது உட்கொண்டதில்லையாம். அதனால் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் மாலையில் "நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகிவிட்டதா? என்று கேட்பார்கள். ஸ்வாமிகள் பல்லக்கில் ஆரோகணம் செய்து கொண்டு, ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகும்போது இந்த நாய் பல்லக்கின் கேழேயே போய்க்கொண்டிருக்கும். நடுவில் ஏதாவது ஓர் ஊரில் பக்தர்களுக்கு சேவை அளிக்கப் பல்லக்கு நிறுத்தப்பட்டால் இந்த நாய் வெகு தூரத்தில் போய் நின்று விடும். சில சமயம் சாலைகளில் நடந்து செல்லும் மடத்தின் யானையின் நான்கு கால்களின் நடுவே அது சென்று கொண்டேயிருக்கும். மடத்தின் காவல்காரர்கள் சற்று அயர்ந்திருந்தால் அது மடத்தில் காவல் காக்கும். மடத்திலிருந்து வழக்கமாக அன்னமிடுகிறவர்கள் ஒரு நாள் அன்னமிட மறந்துவிட்டால் அது அன்று பட்டினி தான் கிடக்கும். ஒரு சமயம் ஸ்வாமிகளை விட்டுப் பிரிய நேர்ந்த அந்த நாய் மீண்டும் ஸ்வாமிகளின் முகாமுக்கு ஓடிவந்துவிட்டது. அன்று முதல் அது உயிர் வாழ்ந்தவரை ஸ்வாமிகளை தரிசிக்காமல் ஆகாரம் உட்கொண்டதில்லையாம்.
ஜீவிதம் என்னவாக இருந்தாலும் ஜீவன் ஒன்று தான் என்பர். அது ஐந்தறிவு படைத்ததானாலும் சரி; ஆறறிவு படைத்ததானாலும் சரி; ஐயனின் கருணை ஜீவனுக்குத் தானே!
ஹே, பரமேஸ்வர சங்கரா! இருக்கும் வரையிலும் இருக்கட்டுமே நின் ஸ்மரணம் என்னிலும்!
"நெஞ்சமதில் நின்ற காஞ்சித் தெய்வநாயகன் தினம்
நெஞ்சமதில் ஆராதனை பெரும்தேவன் என்றும்
நினைத்ததும் என் மனத்தில் உதயமாவார் அவர்
நிலைபெற்ற நாயகர் என் காஞ்சிநாதர்
என் மனத்தில் என்றும் வீற்றிருப்பார்"





Courtesy :   Facebook post  : Krishnamoorthi Balasubramanian

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: