Thursday, April 23, 2015

"பரமேஸ்வரன் நானே"


                   "பரமேஸ்வரன் நானே"








சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சதாராவில் வஸந்த நவராத்திரி சமயம்.
புதுக்கோட்டையிலிருந்து நாங்கள் ஸுவாஸினி
பிக்ஷைக்காக சென்று அங்கு ஒரு வாரம்
தங்கியிருந்து வந்தோம்.

நாங்கள் பெரியவாளுக்கு விதவிதமான
மாலைகள்,கிரீடங்கள் தயாரித்து சமர்ப்பிப்போம்.

ஒருநாள் மாலைப்பொழுது, நாங்கள் பத்துப்பேர்
அமர்ந்து இருந்தோம். ஸ்ரீ பெரியவா அப்போது
வெளியில் வந்தார்கள்.நாங்கள் வந்தனம் செய்தோம்.
ராஜம் அம்மாள் ஒரு நாகாபரண கிரீடத்தை
சமர்ப்பித்தாள். அது வெட்டி வேரில் சந்தன மணி
வைத்து நாகக்குடை போல் மிக அழகாக 
அமைந்திருந்த கிரீடம்.

பெரியவா அந்தக் கிரீடத்தை வாங்கி அருகில்
இருந்த சிவலிங்கத்துக்கு சார்த்தச் சொல்லி
பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் கொடுத்தார்.

உடனே, அவசரமாக, ராஜம்மாள் "இதை பெரியவா
போட்டுக்கணும்!: என்று பிரார்த்தித்தாள்.

பெரியவாள், சிவலிங்கத்தை சுட்டிக்காட்டி
"நான் வேறு, இவர் வேறு இல்லை
நான்தான் இவர்,இவர்தான் நான்"
என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்தார்.

அப்போது மின்னல் போல் ஓர் ஒளி. அங்கு இருந்த
எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.என்ன பாக்யம்!
நாங்கள் சிலிர்த்துப் போய் வாய் அடைத்து
உட்கார்ந்து விட்டோம்.











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan

Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.

No comments: