Tuesday, February 17, 2015

'தருணேந்து மௌலே - என்கிறார். நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார். -- மஹாபெரியவா

                                              




பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய
ஒரு பெரியவாள் அவதாரம் பண்ணப்போகிறார்"

சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(கட்டுரையில் ஒரு பகுதி)

பெரியவா, "என்னவோ சொல்லணும்னு நினைக்கிறே!
சொல்லிவிடேன்."

"பெரியவாளிடம் என்ன சொல்ல முடியும்.
ஸ்ரீதர ஐயாவாள் சுலோகம் ஒன்று நினைவுக்கு வரது"

"ஐயாவாள் சுலோகமா? பக்திரஸம் கொட்டுமே!
சொல்லு பார்க்கலாம்."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"இன்னொரு தடவை சொல்லு!..."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"எங்கே அர்த்தம் சொல்லு பார்க்கலாம்"

"இளம்பிறைச் சந்திரனைத் தலையில் சூடிக்கொண்ட
பெருமானே! உலகில் எல்லாரும் சொல்வார்கள்.-
சிவசிவ என்கிற மதுரமான நாமத்தை ரஸித்துச்
சொல்பவர்கள் துயரப்படமாட்டார்கள் என்று.
அது வெறும் பேச்சுதான். உண்மையிலே-
மனுஷனாகட்டும்,பசு-பூச்சியாகட்டும், எந்த ஜீவனாவது
கஷ்டப்படுவது அவர்களுடைய கண்களில் பட்டு விட்டால்,
அந்தக் கஷ்டம் தனக்கே வந்து விட்டது போல
உருகி விடுவார்கள்"

"நன்னாச் சொன்னே! அதிலே ஒரு ஸ்வாரஸ்யம்
கூட இருக்கு. கவனித்தாயா!"

"என்ன? நான் கவனிக்கவில்லையே!"

'தருணேந்து மௌலே - என்கிறார்.
நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார்.
அவருடைய குருநாதர் போதேந்த்ர ஸரஸ்வதி பூஜை பண்ணின
மூர்த்திதானே சந்த்ரமௌளீச்வரர்.அவரிடம்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள்.

.......................................................................................................................................

கட்டுரையாளர்; இவன் உதட்டிலே ஒன்று சொல்ல வேண்டுமென்று
ஒரு துடிப்பு வந்தது.சொல்லியிருந்தால் அபசாரமாகுமோ,என்னவோ?

நமக்குள்ளே பரிமாறிக்கலாமே!

முன்னூற்றைம்பது வருஷங்கள் முன்னால் இருந்த ஸ்ரீதர ஐயாவாள்,
பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய ஒரு பெரியவாள்
அவதாரம் பண்ணப்போகிறார் என்று,அந்த சந்த்ரமௌலீசுவரரிடம்
விண்ணப்பித்திருக்கிறாரே.!
...........................................................................................................................................

பின்குறிப்பு- இந்த கட்டுரையே பிறர் கஷ்டத்தை பார்த்து மனம்
வேதனைப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடக்கும் சம்பாஷணை.
சம்பவம் பெரிதாக இருந்ததால் அதை தட்டச்சு செய்யவில்லை.
பிறிதொரு சமயம் அதையும் இங்கே போஸ்ட் பண்ணுவேன்
வரகூரான்)











Courtesy :   Facebook post  :  Varagooran Narayanan
Thanks to Mahaperiyava bhaktas for the scanned photos.


No comments: