Saturday, February 7, 2015

சௌந்தர்ய லஹரி சொல்கிறோம்,--------- மகா பெரியவா





சௌந்தர்ய லஹரி சொல்கிறோம், அபிராமி அந்தாதி சொல்கிறோம் என்று பல பெண்கள். என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள்.
நல்ல காரியம்தான் ஆசிர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய ப்ரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதட்சனை, வைரத்தோடு, சீர்செனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் கல்யாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால் தான் முடியும்.
தங்கள் மாதிரியான பெண்கள் வயது வந்ததும் கல்யாணமாகாமல் நிற்பது, அதனால் மன விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு முன் வந்தால் இவர்களிடத்தில் அம்பாளும் மனசு தானாக இரங்குவாள்.'
"நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனைக் கொடுக்கிறோம் என்று சுயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்' என்று சொல்வது கூட தப்பு. ஏனென்றால், ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரி போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமல் ஒருத்தர் வரதட்சணை கொடுத்தாலும் இதனால் அவர்தம் பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணும் போது, வரதட்சணை எதிர்பார்க்கத்தான் செய்வர். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும் கூட வேண்டாம் என்று சொல்கிற உயர்ந்த மனோபாவம் வேண்டும்.
காஞ்சி மகா சுவாமிகள் அருளுரையிலிருந்து..
---------------------
courtesy : facebook  for article and  thanks to periyava bhaktas for photos

No comments: